'ஆக்சன் கிங்'! ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது..! முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய சார்லி..!
கன்னியாகுமரி : தமிழக முதல்வரின் ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது என்றும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்சன் கிங் போல் செயல்படுவதாக நடிகர் சார்லி புகழாரம் சூட்டியுள்ளார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் சுற்றுச்சூழல் மாசு தடுக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் சார்லி கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, மாணவிகளைடையே சிறப்புரையாற்றினார்.

நடிகர் சார்லி
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பயிர்களுக்குப் பதிலாக கல்லூரி மாணவ மாணவிகளே தயார் செய்த பாதுகாப்பான காகித பைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சார்லி கூறும்போது " தமிழ் சினிமா தற்போது உள்ள சூழ்நிலையில் இருந்து நிச்சயமாக மீண்டு வரும் நல்ல படைப்புகள் உருவாகிவருகின்றன.

நடிகர் விவேக்
உலக அரங்கில் ஆற்றல்மிக்க படைப்புகள் விரைவில் வெளிவரும். நடிகர் விவேக் விட்ட பணியை தொடர்ந்து வருவதாகவும் அவர் நட்ட மரக் கன்றுகள் அவரது பெயரை சொல்வது போன்று தொடர்ந்து பலர் இந்த பணியில் இருந்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு கவுன்சிலிங்
அதைவிட முக்கியமாக தான் அடிக்கடி சிறார் காப்பகங்களுக்கு சென்று அவர்களை மனரீதியாக கவுன்சிலிங் செய்து வருவதாகவும். இதன் மூலம் தவறு அவர் நிச்சயம் வாழ்க்கையில் திருந்தி நல்ல வழியில் செல்வார்கள் என்பது தனது நம்பிக்கை.

முதல்வர் ஸ்டாலின்
திரையுலகில் தன்னடக்கம் இல்லாமல் நிதானம் இழக்கும்போது பொருள் பணம் போன்றவை இழப்பு ஏற்படுகிறது இதனால் பலர் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால் தற்போதைய தலைமுறையினர் இந்த விஷயத்தில் அதிக விவரம் தெரிந்தவர்கள் என்றும் தமிழக முதல்வரின் ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது . தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்சன் கிங் போல் செயல்படுகிறார்." என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications