மீனவர்கள் என்றால் ஏமாற்றுவீர்களா? விடமாட்டோம்.. வாக்களித்தே தீருவோம்.. குமரியில் மக்கள் கொந்தளிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் 1000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 1000க்கும் அதிகமான மீனவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து மாயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் கண்டிப்பாக வாக்களித்தே தீருவோம் என்று மீனவர்கள் உறுதியாக கூறி இருப்பதால் கன்னியாகுமரியில் கொதிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் 1000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள் இப்படி விடுபடுவது இதுவே முதல்முறையாகும்.
அதிகாரிகளின் இந்த அலட்சியத்தை எதிர்த்து அங்கிருக்கும் மீனவர்கள் எல்லோரும் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

என்ன பிரச்சனை
ஆனால் இதில் 1000க்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் மாயமாகி இருக்கலாம். 1000 என்பது குறைவுதான் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக மீனவர்கள் எல்லோரும் தூத்தூர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் தற்போது போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போலீஸ் லிஸ்ட்
பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக யாருடைய வாக்குப்பதிவு மறுக்கப்பட்டு இருக்கிறது என்று போலீசார், மீனவர்களிடம் லிஸ்ட் கேட்டு உள்ளனர். அனைத்து மீனவர்களும் இதில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என்று போலீசார் லிஸ்ட் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் மீனவர்கள் 1000 பேரும் இது போல கையெழுத்திட்டு அளிப்பதற்குள் தேர்தலே முடிந்துவிடும் என்று மீனவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மீனவர்கள் பிரச்சனை
இதில் சில மீனவ குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் வெளிநாட்டில் இருந்து கூட வாக்களிப்பதற்காக வந்துள்ளனர். சென்ற தேர்தலில் வாக்களித்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது என்றால் என்ன அர்த்தம். இதில் எதோ மர்மம் இருக்கிறது. இதனால் உடனடியாக மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எல்லோரும் முக்கியம்
எல்லோரும் ஓட்டு போட வேண்டும். அடிப்படை உரிமை என்று கூறுகிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம். எங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. ஆனால் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. குமரியின் ஆட்சியர் எங்களுக்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்று அங்குள்ள மீனவர்கள் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.

அறிவு இல்லை
இதுகுறித்து கருத்து தெரிவித்த பெண் ஒருவர், நாங்கள் மீனவர்கள் என்பதால் எங்களை ஏமாற்றிவிடலாம். எங்களுக்கு அறிவு இல்லை என்று நினைத்துவிட்டார்கள். அதெல்லாம் அந்த காலம். கடலோர மக்கள் இதை விட மாட்டோம். எங்களோட உரிமையை அடைந்தே தீருவோம். இதன் அர்த்தம் எங்களுக்கு புரிய வேண்டும், என்று மிக கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications