குடிபோதையில் ரகளை... ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பண தர மறுத்த வனத்துறையினர்
Recommended Video
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட குமரி, நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் வனத்துறை ஊழியர்களை பயணிகளும், பொதுமக்களும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. பேருந்திற்க்காக காத்து நிற்கும் பயணிகள் அங்கு உள்ள ஹோட்டல்களில் சாப்பிடுவது வழக்கம். அதை போல் இன்று மாலையில் பேருந்து நிலையத்தில் பினில் ஹோட்டலில் பயணிகளும் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

குடிபோதையில் இங்கு சாப்பிட வந்த மூன்றுபேர் சாப்பிடும்போதே கெட்டவார்த்தைகள் பேசியும் அங்கு பணிபுரியும் மாஸ்டரை தகாத வார்த்தைகளால் திட்டியும் அங்கு சாப்பிட்ட பெண் பயணி ஒருவரை கொச்சை வார்த்தையால் பேசியுள்ளனர். இது அங்கு சாப்பிட்ட பயணிகளை முகம் சுழிக்கவைத்தது. பின்பு சாப்பிட்டு விட்டு பணம்தர மறுத்து உள்ளனர்.
ஹோட்டல் ஊழியர் பணம் கேட்டதற்கு முதலில் நாங்கள் வள்ளியூர் காவலர்கள் என சொல்லி தகராறில் ஈடுபட்டனர். பின்பு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் குடிபோதையில் ஹோட்டல் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு நாற்காலிகளை அடித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது. ரகளையில் ஈடுபட்ட மூன்று பேரையும் பயணிகளும் பொதுமக்களும் பிடித்து வடசேரி போலிசாரிடம் ஒப்படைத்த பிறகும் போலீசார் அவர்களை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரிக்காமல் அவர்களை அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இவர்களை பொதுமக்கள் விசாரித்ததில் திசையன்விளை, ஆரல்வாய்மொழி, வள்ளியூர் ஆகிய ஊர்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் என கூறப்படுகிறது. forest என ஸ்டிக்கர் ஒட்டிய இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் குடி போதையில் இருந்ததாகவும், சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தாகதவார்த்தையால் திட்டி கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததாகவும் நேரில் பார்த்த பொது மக்களும் ஹோட்டல் ஊழியர்களும் தெரிவித்தனர்.
குடிபோதையில் இருந்த நபர்களை அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்ததால் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். பொதுமக்களை பாதுகாக்கும் போலீசாரே இம்மாதிரியான சம்பவத்தில் ஈடுபடுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications