கொடூரமாக கொல்லப்பட்ட வன ஊழியர், மனைவி.. 8 ஆண்டுகளாக இழுபறி விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வன ஊழியர் ஆறுமுகம் அவரது மனைவி இருவரும் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் எட்டு ஆண்டுகளாகியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், உயர்நீதிமன்றம் இந்த வழ
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வன ஊழியர் ஆறுமுகம் அவரது மனைவி இருவரும் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் எட்டு ஆண்டுகளாகியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவிட்டது. வழக்கை ஆறு மாதத்திற்குள் எஸ்.பி., மேற்பார்வையில் முடிக்க உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேருரை சேர்ந்தவர் வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகீஸ்வரி. இவர்கள் இருவரும் கடந்த 10-11-2011ல் (8 ஆண்டுகளுக்கு முன்பு) கோட்டாரில் நடந்த திருமண வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் சுசீந்தரம் காவல் நிலையம் அருகே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த சுமார் நாற்பது சவரன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது. இவர்களை கொலை செய்ய பயன்படுத்திய தோட்டா, அரசு தோட்டா என்பது தெரிய வந்தது. கொலை சம்பவம் அரங்கேறி சுமார் எட்டு மாதங்களுக்கு பின் போலீசார் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக இருந்த புத்தேரியை சார்ந்த சகாயம் என்ற ஐயப்பன் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஆவணங்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
பல முறை உறவினர்கள் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளாகியும் ஆறுமுகத்தின் பணிக்கொடை,பலியான வன ஊழியரின் வாரிசுகளுக்கு வேலை, அரசின் உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. வழக்கின் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர யோகீஸ்வரியின் தாயார் குமாரி, இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார் சிபிசிஐடிக்கு மாற்றியதோடு, எஸ்.பி. மேற்பார்வையில் வழக்கை ஆறு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications