கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் அறிமுகமானது சூப்பர் வசதி
கன்னியாகுமரி: பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க, கன்னியாகுமரி கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கிளை தபால் நிலையங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 கிலோ வரையிலான பார்சல்களை கிளை தபால் நிலையங்கள் வழியாக அனுப்ப முடியும். மேலும் 20 கிலோ வரையிலான பார்சல்களை துணை மற்றும் தலைமை தபால் நிலையங்கள் வழியாக அனுப்ப முடியும் என கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
தபால்துறையின் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க, கன்னியாகுமரி கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கிளை தபால் நிலையங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 10 கிலோ வரையிலான பார்சல்களை கிளை தபால் நிலையங்கள் வழியாக அனுப்ப முடியும். மேலும் 20 கிலோ வரையிலான பார்சல்களை துணை மற்றும் தலைமை தபால் நிலையங்கள் வழியாக அனுப்ப முடியும். பார்சல் அனுப்புவதற்கான கட்டணம் 500 கிராம்கள் வரை ரூ.36 மற்றும் ஜி.எஸ்.டி., ஒவ்வொரு கூடுதல் 500 கிராம் அல்லது அதன் பகுதிக்கு ரூ.16 மற்றும் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படும்.
விரைவு பார்சல் (இ.எம்.எஸ்.) சேவை மூலமாக 35 கிலோ வரையிலான பொருட்களை பாதுகாப்பாக மற்றும் விரைவாக எந்த இடத்திற்கும் அனுப்ப முடியும். இந்த சேவையில் சிறப்பு கட்டண சலுகை, கிரெடிட் மற்றும் முன் வைப்பு வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. சிறியது முதல் பெரிய அளவிலான பொருட்களை பேக்கிங் செய்து (அதிகபட்சமாக 35 கிலோ வரை) அனுப்பும் வசதிகள் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்கள், கன்னியாகுமரி, நெய்யூர், குளச்சல், அருமனை, மார்த்தாண்டம், குழித்துறை தபால் நிலையங்களில் உள்ளன.
மேலும் கீழ்க்கண்ட பொருட்களை தபால் துறையின் மேம்படுத்தப்பட்ட பார்சல் சேவைகள் மூலம் சிறப்பு 'பேக்கிங்' செய்து பாதுகாப்பாக அனுப்ப முடியும். குறிப்பாக நூல்தொழில் மற்றும் துணி பொருட்கள் (சேலைகள், உடைகள், பருத்தி துணிகள், தயாரிக்கப்பட்ட ஆடைகள்), மருத்துவ தயாரிப்புகள் (ஆயுர்வேதம் உள்ளிட்டவை), மின்னணு பொருட்கள் மற்றும் கருவிகள் (செல்போன் உபகரணங்கள், சில்லரை மின்னணு பொருட்கள்), கைவினைப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்கள், உணவுப்பொருட்கள் (பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், கைருசி தயாரிப்புகள்) போன்றவற்றை சிறப்பு 'பேக்கிங்' மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அதிக எண்ணிக்கையில் பார்சல்கள் அனுப்ப விரும்பும் வணிக நிறுவனங்கள், ஹோம்மேட் தயாரிப்பாளர்கள், ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் தபால் துறையுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கேற்ற சிறப்பு கட்டண சலுகைகளோடு கூடிய சிறப்பு பார்சல் சேவைகளை ஒப்பந்த முறையில் பெறலாம்.
இந்த சேவையின் மூலம், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், பல்வேறு தொழில் செய்பவர்கள், இதர வாடிக்கையாளர்கள் என அனைவரும் தங்களின் பொருட்களை பாதுகாப்பாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப முடியும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம். வணிகத் தொடர்புகளுக்கு 9894774410, 9080820107 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications