ஹாரன் அடித்து கொந்தளித்த மக்கள்.. அப்படிதான் பேசுவேன்.. என்ன சவுண்டு.. நடுரோட்டில் பிரேமலதா அடாவடி
Recommended Video

நாகர்கோவில்: 4 ரோடுகள் சந்திக்கும் ஜங்ஷனில் பாதையை அடைத்து கொண்டு பிரேமலதா பிரச்சாரம் செய்ததால், வாகன ஓட்டிகள் எல்லாரும் டென்ஷன் ஆகிவிட்டார்கள்!
கன்னியாகுமரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் செய்ய வந்தார்.
தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பில் திறந்த வேனில் நின்றுகொண்டு ஓட்டு கேட்டு கொண்டிருந்தார். இந்த இடம் 4 வழி சாலைகள் சந்திக்கும் பகுதி. மிக முக்கியமான ஜங்ஷன் என்பதால் அந்த பக்கம் நிறைய வாகனங்கள் எப்போதுமே சென்று கொண்டிருக்கும்.

நெருக்கடி
பிரேமலதா நீண்ட நேரத்துக்கு பேசி கொண்டே இருந்தார். இதனால் டிராபிக் ஜாம் ஆக ஆரம்பித்தது. கார், டூவீலர்கள் என எல்லாமே அப்படி அப்படியே நின்றுவிட்டன. யாராலும் ஒரு அடி கூட நகர முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் எல்லோருமே டென்ஷன் ஆகிவிடவும், அவர்களது வண்டி ஹாரனை அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

என்ன சவுண்டு?
இப்படி திடீரென்று எல்லா பக்கமும் ஹாரன் சத்தம் வரவும் பிரேமலதாவுக்கு கோபம் வந்து வந்துவிட்டது. ஆனால் ஹாரன் அடிப்பவர்களிடம் அதை வெளிப்படுத்தாமல், பிரச்சாரத்தின் மூலம் அதை சொன்னார். "நான் இங்க பிரச்சாரம் செய்றதை பார்த்துட்டு பயப்படறவங்க எல்லாம் இப்படி ஹாரன் அடிச்சு தொந்தரவு பண்றாங்க. இதெல்லாம் என்ன சவுண்டு? கேவலம்!

பயப்பட மாட்டோம்
நாங்க முறைப்படி பெர்மிஷன் வாங்கிட்டுதான் இப்படி பிரச்சாரம் செய்றோம். அதனால இதை தடுக்க யாருக்குமே அதிகாரம் இல்லை. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.. போய் எங்காவது இதை வெச்சுக்கீங்க. எங்க கிட்ட நடக்காது.

பயம் வந்துடுச்சு
நேருக்கு நேராக மோதணும். பின்னால நின்னுக்கிட்டு ஹாரன் அடிக்கிறவங்க கோழைகள். நான் இப்போ இன்னும் 2 மணி நேரம்கூட பேசுவேன். எத்தனை எதிர்ப்புகள் வரட்டும்.. எதிர்ப்புகளை சந்தித்து வளர்ந்த கட்சிதான் தேமுதிக. நான் பேச பேச எதிர்க்கட்சிக்காரங்களுக்கு பயம் வந்துடுச்சு" என்றார்.












Click it and Unblock the Notifications