மோடியின் தியானம் முடிந்து.. கண்ணை திறந்ததும் இதுதான் நடக்கும்! அடித்து சொல்லும் பிரசாந்த் பூஷன்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பிரதமர் மோடியின் தியானத்தில் என்ன நடக்கும்? அவர் தியானம் முடித்து கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

2024 லோக்சபா தேர்தல் குறித்து தீவிரமான கருத்துக்களை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்து வருகிறார். 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வி அடையும் பட்சத்தில் முதல் சிக்கல் யாருக்கு ஏற்படும் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மோடிக்கு ஆதரவாக இருக்கும் Godi மீடியா என்று அழைக்கப்படும் வட இந்திய ஊடகங்கள் மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

narendra modi kanniyakumari lok sabha election 2024 2024

ஜூன் 4-க்கு பிறகு, Godi மீடியாக்களும், அதன் தொகுப்பாளர்களும், ஆசிரியர்களும் மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்க நேரிடும். ஒருமைப்பாட்டின் உட்கருத்தை அவர்கள் எப்போதோ சிதைத்துவிட்டனர். தேர்தல் முடிவிற்கு பிறகு அவர்களின் அதிகாரமும், பணமும் சேர்ந்து சிதைய இருக்கிறது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எச்சரித்துள்ளார்.

பாஜக தோல்வியை உணர்ந்து விட்டது. அதனால்தான் பல துறைகளுக்கு அவசர அவசரமாக பணி நீட்டிப்பு செய்கிறது. அவசர அவசரமாக நியமனங்களை மேற்கொள்கிறது. தோல்வி வரப்போவதை உணர்ந்தே பாஜக இப்படி செய்கிறது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எச்சரித்துள்ளார்.

தியானம் செய்வார்?: இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் தியானத்தில் என்ன நடக்கும்? அவர் தியானம் முடித்து கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

அதில், 30ம் தேதி தேர்தல் பிரசாரம் முடிந்ததும் மோடியின் கடைசி தேர்தல் பிரச்சார உத்தி இந்த தியானத்தில் இருந்து ஆரம்பமாகும். அங்கே கேமராக்கள் மட்டுமே இருக்கும். 2 ஆயிரம் வீரர்கள் கொண்ட காவல் படை அவரைப் பாதுகாக்கும். அப்பகுதி முழுவதும் மக்கள் நுழையாத வண்ணம் தடுக்கப்படுவார்கள்.

இப்போது கேள்வி என்னவென்றால், தியானம் முடிந்ததும் பையை எடுத்து கொண்டு போவதை பற்றி யோசிப்பாரா? அல்லது புதிய அரசாங்கத்தை எப்படி சட்டத்தின் விதிகளை மீறி உருவாக்கலாம் என்பதை பற்றி சிந்திப்பாரா? என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கிண்டல் செய்துள்ளார்.

மோடி தியானம் கன்னியாகுமரி: நேற்று லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய உள்ளார். நேற்று தமிழ்நாடு வந்த மோடி, குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய தொடங்கி உள்ளார். கடந்த முறை 2019 லோக்சபா தேர்தலுக்கு பின் கேதார் நாத் குகையில் மோடி தியானம் செய்தார்.

அதேபோல் இந்த முறை தியானம் செய்கிறார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்.. சேனல்களின் எல்லா கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து பிரச்சாரம் முடிந்த பின்பும் கூட தேர்தலுக்கு முன்பாக மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளார். சுவாமி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் மோடி தியானம் செய்கிறார். இரண்டு நாட்களுக்கு அவர் தியானம் செய்ய உள்ளார்.

48 மணி ஏசி அறையில் அவர் விடாமல் தியானம் செய்வார். தூங்க, குளிக்க மட்டும் பிரேக் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+