விஜய் வசந்த் vs பொன் ராதாகிருஷ்ணன்.. கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பெரிய திருப்பம்.. தந்தி டிவி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் விஜய் வசந்த் இந்த முறை 34 முதல் 40 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 31 முதல் 37 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், பாஜக, பாமக அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் களத்தில் இறங்கி உள்ளன. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் தமிழக தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே மொத்தமாக அடித்து தூக்கும் என்றே கூறியுள்ளன. சில கணிப்புகளில் ஒரிரு இடங்களில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வரும் என்று கணித்துள்ளன.
தமிழ்நாட்டின் பிரபல செய்தி ஊடகமான தந்தி டிவி தனது இரண்டாவது கருத்துக்கணிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பில் திமுக கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
தொகுதி வாரியான நிலவரத்தை பொறுத்தவரை இந்த செய்தியில் கன்னியாகுமரி பற்றி பார்க்க போகிறோம். தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டம் என்று சொல்வதை விட, முதல் மாவட்டம் என்று சொல்லாம். கேரளாவிலிருந்து பிரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவைப் போலவே அரசியல் சூழல் உள்ள பகுதியாகும். இங்கு திமுக அதிமுகவை விட காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் பாஜகவிற்கு செல்வாக்கு அதிகம். இங்கு ரப்பர் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அடுத்தபடியாக மீன் பிடி தொழிலும், சுற்றுலாவும் அதிகமாக உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் இடைத்தேர்தலில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுகிறார். விஜய் வசந்த் இந்த முறை 34 முதல் 40 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், அதிமுக சார்பில் போட்டியிடும் பசலியன் நசரேத் 16 முதல் 22 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது.
அதிமுகவை விட மிக அதிகமாக பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 31 முதல் 37 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மரிய ஜெனிபர் 8 முதல் 11 சதவீதம் வாக்குகளை பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications