வெறும் 12 வயசுதான்.. விவசாயத்தை தூக்கி பிடிக்க தந்தையுடன் போராடும் கவிக்குமார்.. கரூரில் நெகிழ்ச்சி
கரூர்: ஊரடங்கு உத்தரவு ஒரு புறமிருக்கும் நிலையில் விவசாயத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் களமிறங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கரூர் மாவட்டம், செங்கம் ஊராட்சி மேலாடை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இவரது இரண்டாவது மகன் கவிக்குமார் (12).
இவர் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் இயங்காததால் தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளை செய்து வருகிறார். பல சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது எப்படி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொழுதுபோக்கு
பல பிரபலங்கள் டிக்டாக்கில் சமையல் செய்வது உடற்பயிற்சி செய்வது போன்ற பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் கவிக்குமார் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டாமல் தனது தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆடு, மாடு
ஏர் உழுவது, விதைப்பது, ஆடு மாடுகளைப் பராமரிப்பு அவற்றிற்கு உரிய தண்ணீர் காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஈடுபடுத்தியுள்ளது. ஒரு பக்கம் கொரோனா லாக்டவுனால் வறுமையில் இருக்கும் குடும்பத்தை தூக்கி நிறுத்த தஞ்சையில் சமோசா விற்கும் விஷ்ணு. மறுபக்கம் விவசாயத்தை தூக்கி நிறுத்த விவசாயம் செய்யும் கவிக்குமார். இருவரும் 12 வயது குழந்தைகள்தான். டாக்டர் மகன் டாக்டராவது, என்ஜீனியர் மகன் என்ஜீனியராவது என பரம்பரை பரம்பரை இருக்கும்போது விவசாயியின் மகன் மட்டும் விவசாயி ஆவதில்லை என கூறுவதை நாம் கேட்டுள்ளோம்.

செய்முறை விளக்கங்கள்
இது போன்றவற்றை சினிமா வசனங்களிலும் கேட்டுள்ளோம். ஆனால் கவிக்குமாருக்கு விவசாயத்தின் மீதுள்ள ஈடுபாட்டை நினைத்து அனைவரும் பெருமைப்பட வேண்டும். விவசாயம்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என காந்தி கூறினார். பாடப்பிரிவுகளில் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் போன்ற பாடத்திட்டங்களுக்கு செய்முறை விளக்கங்கள் செய்கிறோம்.

மாணவர்கள்
அது போல் விவசாயம் குறித்து ஒரு பாடப்பிரிவு, பள்ளிகளில் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். அதற்காக மாணவர்களுக்கு செய்முறை விளக்கங்களும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் உண்ணும் ஒரு உணவு எப்படி தயாராகிறது என்பதை மாணவர்கள் உணருவர். குறைந்தபட்சம் வீடுகளிலோ பள்ளிகளிலோ காய்கறி, பழம், கீரை- இவற்றில் ஏதாவது ஒன்றை விளைய வைக்க சொல்லி அந்த மாணவர்களை பரிசுகள் கொடுத்து பாராட்டலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications