நாங்க போட்டா மட்டும் கைதா? முதல்வர் போட்டோவை எடிட் செய்து சீண்டிய பாஜக நிர்வாகி.. தூக்கிய போலீஸ்!
கரூர்: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை எடிட் செய்து பதிவிட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் பேசி இருந்தார்.
தலைவர்கள் பற்றி அவதூறு கருத்துக்கள் பரப்ப கூடாது. சாதி, மோதல்களை சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்க வேண்டாம். அதை சமூக ரீதியான ஒழுக்கப் பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்து இருந்தார்.

எச்சரிக்கை
இது போக சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க புதிய மையம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார். சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகள், அவதூறுகள், வெறுப்பு கருத்துக்களை கண்காணிக்கும் விதமாக இந்த மையம் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படும் நபர்கள் இதில் கண்காணிக்கப்படுவார்கள். அதன் மூலம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை எடிட் செய்து பதிவிட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் பாஜக இளைஞர் அணி நிர்வாகி S.A விக்னேஷ் சமூகவலைதளத்தில் தலைவர்களை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டது பெரிய சர்ச்சையானது. முதல்வர் ஸ்டாலின் படத்தையும் அவர் எடிட் செய்து பதிவிட்டார். அதேபோல் அமைச்சர் பிடிஆர், சில செய்தியாளர்கள் படத்தையும் அவர் எடிட் செய்து பதிவிட்டார்.

எடிட் செய்து போட்டோ
இப்படி செய்ததோடு இல்லமால்.. நாங்கள் எடிட் செய்து போட்டோ போட்டால் அதில் என்ன தவறு. திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சிப்பது போலத்தான் இதுவும். நாங்க போட்டா மட்டும் கைது செய்வீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து இது தொடர்பாக கரூர் மாவட்ட திமுக ஐடி விங் நிர்வாகி தீபக் கரூர் காவல்நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தார். அதில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை இவர் ஆபாசமாக சித்தரித்துள்ளார்.

எச்சரிக்கை
அவரின் போஸ்ட் வெறுப்பை பரப்பும் வகையில் உள்ளது. அவர் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை எடிட் செய்து பதிவிட்ட பாஜக நிர்வாகி விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications