தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்தது.. 77.62% வாக்குகள் பதிவு!
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 4 இடைத்தேர்தல்களிலும் வாக்குப் பதிவு மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. இதில் 77.62% வாக்குகள் பதிவாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. இதனிடையே சூலூர் தொகுதியின் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதையடுத்து சூலூர் உள்பட மேற்கண்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து மே 19-ஆம் தேதி இறுதி கட்ட தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இந்த 4 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
தமிழகத்தில் பூந்தமல்லி, பண்ருட்டி, பாப்பிரெட்டிப்பட்டி உள்பட 13 வாக்குச் சாவடிகளுக்குள்பட்ட வாக்காளர்கள் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.
மொத்தம் 137 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்காக அரவக்குறிச்சியில் 250 வாக்குச் சாவடிகளிலும் திருப்பரங்குன்றத்தில் 297 வாக்குச்சாவடிகளிலும் ஒட்டப்பிடாரத்தில் 257 வாக்குச் சாவடிகளிலும் சூலூரில் 324 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதில் ஒட்டப்பிடாரம் 72.61%, அரவக்குறிச்சி 84.28%, திருப்பரங்குன்றம் 74.14%, சூலூர் 79.41% வாக்குகள் பதிவாகி உள்ளது. அரவக்குறிச்சியில்தான் அதிகமாக 84.28% வாக்குகள் பதிவாகி உள்ளது.
மொத்தமுள்ள 22 தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெருவாரியாக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தெரிகிறது. இதனால் இந்த 4 தொகுதி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 23-ஆம் தேதி என்ன நடைபெறுகிறது என்பதை பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications