அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வரட்டும்… ஸ்டாலின் முதல்வராவார்… செந்தில் பாலாஜி சொல்கிறார்
கரூர்: மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கக் கூடிய தேர்தல்தான் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் என்று, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் பரமத்தியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய, அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழக மக்களை பாதுகாக்கக்கூடிய ஆளுமை கொண்ட ஒரே தலைவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்தான் என்றார்.

அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் வேட்பாளராக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தளபதியின் கரத்தைப் பிடித்து கழகத்தில் இணைத்துக் கொண்ட எனக்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் என்ற உயரிய பதவியும், அரவக்குறிச்சி இடைத் தேர்தல் வேட்பாளர் வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் பேசினார்.
இதற்கு நன்றிக்கடனாக நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மட்டுமல்ல அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியையும் சமர்ப்பித்து இனிவரும் காலங்களில் எந்த தேர்தலாக இருந்தாலும் கரூர் மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்,
நாம் அனைவரும் இணைந்து செயலாற்றி தளபதி ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பேசினார். முன்னதாக, திட்டமிட்டு, வன்முறையை அதிமுக தூண்டிவிடுவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications