Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக பெண் கவுன்சிலர் காட்டு பகுதியில் கொலை.. டீக்கடை நடத்தி வந்த தம்பதி கைது! வெளிவந்த ஷாக் காரணம்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே, திமுக பேரூராட்சி பெண் கவுன்சிலர் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டீக்கடை நடத்தி வரும் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சோழகாளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்னசமுத்திரம் பேரூராட்சி திமுக கவுன்சிலராக உள்ளார். ரூபா கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு, கரூர் வந்த அவர் வேலை முடிந்து வீடு திரும்பவில்லை.

Couple arrested in DMK woman Councilor murder case in karur

இதையடுத்து தங்கராஜ் தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அது ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்துள்ளது. அவரது மகன் கொடுமுடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், பாலமலை அருகே காட்டுப்பகுதியில், பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் அரை நிர்வாணமாக சடலமாக கிடந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பரமத்தி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் ரூபா என்பதையும் உறுதி செய்தனர். பின்னர், ரூபாவின் குடும்பத்தினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் ரூபா கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கரூர் மாவட்டம் நொய்யலில் டீக்கடை நடத்தி வரும் தம்பதியர் ரூபாவை கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, உண்மையைக் கண்டறிந்துள்ளனர். ரூபா தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். கடன் பிரச்சனையில் இருந்து வந்த அவர்கள், ரூபாவை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து ரூபா அணிந்திருந்த 5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+