கம்பிகளில் நோ கிரீஸ்.. திமுக மாநாட்டில் இதை கவனிச்சீங்களா? தவெக நோட் பண்ணுங்கப்பா
கரூர்: திமுக முப்பெரும் விழா, கரூரில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் பல இதில் பங்கேற்றிருக்கினர். மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த ரேப் வாக் பாதையின் தடுப்பு கம்பிகளில் கிரீஸ் எதுவும் தடவப்படாமல் இருக்கிறது. இதனை போட்டோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ள திமுகவினர், தவெகவை விமர்சித்திருக்கின்றனர்.
சமீபத்தில் மதுரையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் விஜய் ரேம் வாக் செல்ல தடுப்பு கம்பிகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் மேடை மீது ரசிகர்கள் ஏறிவிடக்கூடாது என்பதற்காக அதில் முன்னெச்சரிக்கையாக கிரீஸ் தடவப்பட்டிருந்தது.

இதனால் கம்பி மீது ஏற முயன்ற பலர் சறுக்கி விழுந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பரவி, விஜய் மீதான விமர்சனமாக மாறியிருந்தது.
தவெக மாநாட்டை போலவே, இன்று கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவிலும் ரேம் வாக் பாதையும் அதன் ஓரத்தில் கம்பி தடுப்புகளும் போடப்பட்டிருந்தன. ஆனால் அதில் கிரீஸ் எதுவும் தடவப்படவில்லை. இந்நிலையில், இதனை போட்டோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்த திமுகவினர், தவெக எங்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாடம் எடுத்திருக்கின்றனர்.













Click it and Unblock the Notifications