சர்ச்சையான ஏஆர் ரஹ்மான்.. ‛மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் பங்கேற்காதவருக்கு ரூ.67,000 வழங்க உத்தரவு
கரூர்: கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் ‛மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. இந்நிலையில் தான் நிகழ்ச்சியில் பங்கேற்காத நபருக்கு டிக்கெட் கட்டணத்தை விட சுமார் 6 மடங்கு பணத்தை வழங்க கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் முன்னணி திரைப்பட இசையமைப்பாளராக இருப்பவர் ஏஆர் ரஹ்மான். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா உள்பட வெளிநாடுகளில் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் ஏஆர்ரஹ்மானின் ‛மறக்குமா நெஞ்சம்’ கான்சர்ட் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தனர்.
ஆனால் திட்டமிட்டப்படி அக்டோபர் மாதம் 12ம் தேதி நிகழ்ச்சி நடைபெறவில்லை. அன்றைய தினம் கனமழை பெய்ததால் நிகழ்ச்சி இன்னொரு நாளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. டிக்கெட்டுகளின் கட்டணத்துக்கு ஏற்பட இருக்கைகள் போடப்படவில்லை. இதனால் பலரும் இருக்கைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
அதோடு ஏராளமானவர்கள் நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பினர். மேலும் அந்த இடத்தில் கடும் போக்குவர்தது நெரிசல் ஏற்பட்டதோடு, முதல்வர் ஸ்டாலினின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரினர்.
இந்நிலையில் தான் கரூர் திருப்பதி லே-அவுட்டில் வசித்து வரும் அஸ்வின் மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்துடன் ஏஆர் ரஹ்மானின் ‛மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியை பார்க்க டிக்கெட் எடுத்தார். அவர் ரூ.12 ஆயிரம் டிக்கெட்டுக்காக செலவு செய்தார். ஆனால் அக்டோபர் 12ம் தேதி நடக்க வேண்டிய நிகழ்ச்சி மாற்றப்பட்டதால் அஸ்வின் மணிகண்டன், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.
நிகழ்ச்சி மாற்றப்பட்டுள்ளதால் இனி என்னால் பங்கேற்க முடியாது. இதனால் டிக்கெட் கட்டணத்தை திரும்ப தரும்படி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமும் டிக்கெட் கட்டணத்தை திரும்ப அளிப்பதாக கூறியது. ஆனால் கடைசி வரை கட்டணம் திருப்பி வழங்கப்பவில்லை. இதையடுத்து அஸ்வின் மணிகண்டன் சார்பில் கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. அதாவது டிக்கெட் தொகையுடன் சேர்த்து அஸ்வின் மணிகண்டனுக்கு ரூ.67 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ஏசிடிசிக்கு உத்தரவிட்டது. இதில் டிக்கெட் தொகை ரூ.12 ஆயிரம், இழப்பீடு ரூ.50 ஆயிரம், செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.67 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications