போக்குவரத்து அமைச்சரின் மாவட்டத்திலேயே ராத்திரி 10 மணிக்கு மேல் பஸ் இல்லை!
கரூர்: தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இரவு 10 மணிக்குமேல் பேருந்து வசதி இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தின் தென்பகுதி திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே முடிகிறது. வையம்பட்டியில் இருந்து கரூருக்கு செல்ல அம்மாவட்டத்தின் மையப்பகுதிகளைக கடந்துதான் செல்ல வேண்டும்.
குறிப்பாக வையம்பட்டி அடுத்து பாலவிடுதி, தரகம்பட்டி, உப்பிடமங்கலம், புலியூர் வழியாக கரூரைச் சென்றடைகிறது இந்த வழித்தடம். இந்த வழித் தடத்தில் பகல் நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்ற கணக்கில் பேருந்து வசதி உள்ளது. ஆனால், வையம்பட்டியில் இருந்து வரும் அனைத்துப் பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

பேருந்து வசதி கோரும் மக்கள்
ஆகையால் பகலில் அதாவது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அத்துடன் இப்பகுதி மக்கள் மணப்பாறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை என எந்த நகரங்களுக்குச் சென்றாலும் இரவு 9 மணிக்குள் வையம்பட்டி வந்தால்தான் அன்று இரவு வீட்டிற்குச் செல்ல முடியும். இல்லையென்றால் வையம்பட்டியிலேயே அந்த இரவை கழிக்க வேண்டியதுதான்.

9 மணியுடன் முடிந்தது கடைசி பேருந்து
ஏனென்றால், வையம்பட்டியில் இரவு 9 மணிக்குத்தான் கரூருக்கு கடைசிப் பேருந்து. அந்தப் பேருந்தை விட்டால் அன்று இரவு வையம்பட்டியில்தான் தங்கியாக வேண்டும். இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மணப்பாறை, திருச்சி போன்ற ஊர்களுக்கு மருத்துவ வசதி போன்றவற்றிற்காக சென்று வரும் மக்களுக்கும் இதே நிலைதான். அவர்கள் இரவு முழுவதும் வையம்பட்டியிலேயே தங்கி அடுத்தநாள் காலை 5.30 மணிக்கு வரும் பேருந்தில்தான் வீடு போய் சேர முடியும். (கார் வாடகைக்கு எடுத்தால் குறைந்தது 200 ரூபாய் ஆகும்.)

இரவுநேரப்பேருந்து வேண்டும்
சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைமைதான் இப்பகுதியில் நிலவுகிறது. எவ்வளவு போக்குவரத்து வசதிகள் வந்தும் இன்னும் இந்தப் பகுதிக்கு இரவுப் பேருந்து வசதி இல்லாததது இந்தப் பகுதி மக்களின் பெரும் குறையாகவே உள்ளது.

அமைச்சருக்கு பொதுமக்கள் கோரிக்கை
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் நிறைய புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறார். ஆனால், இந்த பழைய வழித்தடமான வையம்பட்டியில் இருந்து கரூருக்கு இரவு நேரங்களில் பேருந்து வசதியை செய்து தந்தார் என்றால் அவர் அப்பகுதி மக்களின் பாராட்டு மழையில் நனைவார் என்பதோடு அல்லாமல். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் அவருக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications