ஜெயலலிதா மறைவுக்கு பின் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டதா... மு.க. ஸ்டாலின் கேள்வி
அரவக்குறிச்சி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டதா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி கேட்டுள்ளார்.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஜெயலலிதா மரணத்துக்கு காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

விடைகொடுங்கள்
மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பின் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். ஆட்சியில் இருந்து பழனிசாமிக்கு விடைகொடுங்கள் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்துக்கு முறையாக சம்பளம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த அவர், அரவக்குறிச்சி - நங்காஞ்சி ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

சிந்தனையே இல்லை
ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை தவிர அதிமுகவினருக்கு வேறு சிந்தனையே இல்லை என விமர்சனம் செய்த ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சிக்கின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

6 முறை சம்மன்
6 முறை சம்மன் அனுப்பியும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகளில் சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் பதில்
எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு பதிலடியாக, அதிமுக அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications