ராகுல்காந்தியின் நம்பிக்கைக்குரியவர்! ஊழலுக்கு எதிரானவர்! யார் இந்த ஜோதிமணி?
கரூர்: கரூர் லோக்சபா தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, யார் இவர்?
கரூர் லோக்சபா தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் கரூர் லோக்சபா தொகுதியில் ஜோதிமணி (காங்கிரஸ்), கே.ஆர்.எல்.தங்கவேல் (அதிமுக), வி.வி.செந்தில்நாதன் (பாஜக), டாக்டர் ஆர்.கருப்பையா (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை ஜோதிமணி 534906 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 368090 வாக்குகளும், பாஜக வேட்பாளர் செந்தில் நாதன் 102482 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இந்த தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இரண்டாவது முறையாக கரூர் எம்பியாகும் ஜோதிமணி யார் என்பதை பார்க்கலாம். அரவக்குறிச்சியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவருடைய தந்தை விவசாயி. சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்துவிட்டார், இதனால் தனது தாயின் ஆதரவுடன் படித்து வளர்ந்த இவர் உடுமலைபேட்டையில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்தார்.
கல்லூரி காலங்களில் இவர் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்ப்பட்டார். அது போல் என்எஸ்எஸ் முகாம்களிலும் கலந்து கொண்டு சமூக சேவை ஆற்றினார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் டிகிரி படித்துள்ளார். தனது 22 வயதில் அரசியலில் நுழைந்தார் ஜோதிமணி. இவர் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு கொந்தளித்துவிடுவார். நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமைகளுக்காக போராடியுள்ளார். இந்த நிலையில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்றே கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் போர்க் கொடி உயர்த்தினர். ஆயினும் டெல்லியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அவருக்கு இந்தத் தேர்தலில் சீட் கிடைத்துவிட்டது.
மேலும் திமுகவின் செல்வாக்கும் அவருக்கு இருக்கிறது. கடந்த தேர்தலில் அதிமுகவின் தம்பிதுரைக்கு எதிராக எப்படி அதிருப்தி நிலவியதோ அது போல் ஜோதிமணிக்கும் இந்த முறை நிலவுகிறது. எனவே ஜோதிமணிக்கு இந்த முறை அத்தனை எளிதில் வெற்றி கிட்டாது என்றார்கள். ஆனால் 534906 வாக்குகளை பெற்று ஜோதிமணி வென்றார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications