Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாலரை வருஷமா ஏன் வரல மேடம்? இப்ப எதுக்கு வந்திருக்கீங்க! கரூர் எம்.பி.ஜோதிமணியை அலற விட்ட வாக்காளர்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கடந்த நான்கரை ஆண்டுகளாக தங்கள் பகுதியை எட்டிக்கூட பார்க்காமல் இருந்துவிட்டு, இப்ப மட்டும் எதற்கு வந்திருக்கிறீர்கள் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் வாக்காளர் ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் ஓட்டுக்காக இப்போது ஊருக்கு வந்திருக்கீங்க, அப்படித்தானே என வினவி ஜோதிமணி எம்.பி.யை அலறவிட்டார் அந்த வாக்காளர்.

Why didnt you come for four and a half years madam? The voter asked question to Karur MP Jothimani

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி எம்.பி. கடந்த 2019 முதல் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகின்றன.

இந்த 6 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்றால் மாதத்தின் பாதி நாட்கள் ஜோதிமணி எம்.பி.யால் வேறு எந்த பணியும் செய்ய முடியாது. பாரத் ஜோடோ யாத்ரா உள்ளிட்ட கட்சிப் பணிகளில் பிசியாக இருக்கும் அவர் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் டெல்லியிலேயே தங்க வேண்டிய சூழல் உள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்கு சுற்றுப்பயணம் சென்ற ஜோதிமணிக்கு அங்கு அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. கிராம மக்களை சந்தித்துவிட்டு புறப்படவிருந்த ஜோதிமணியிடம், வாக்காளர் ஒருவர் நாலரை வருஷமா ஏன் நீங்க எங்க ஊருக்கு வரல. நன்றி சொல்லக் கூட வராத நீங்க இப்ப எதுக்கு வர்ரீங்க என கேள்வி எழுப்பினார்.

இதனால் டென்ஷனான ஜோதிமணி எம்.பி. 6,000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தாம் நன்றி சொல்ல சென்றிருப்பதாகவும் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருக்கும் உங்களுக்கு பதிலளிக்க முடியாது எனவும் கூறிவிட்டு நடையை கட்டினார். இருப்பினும் அந்த வாக்காளர் விடுவதாக இல்லை, தேர்தல் வரவுள்ளதால் ஓட்டுக்காக இப்ப மட்டும் நாங்கள் தெரிகிறோமா எனக் கேட்க அந்த இடம் மேலும் பரபரப்பானது.

இதையடுத்து காவல்துறையினர் சமாதானப்படுத்தி கேள்வி எழுப்பிய நபரையும், காங்கிரஸ் கட்சியினரையும் அனுப்பி வைத்தனர். மக்கள் மிகவும் விழிப்புணர்வாக இருப்பதால் பல தொகுதிகளிலும் சிட்டிங் எம்.பி.க்களின் நிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+