நாலரை வருஷமா ஏன் வரல மேடம்? இப்ப எதுக்கு வந்திருக்கீங்க! கரூர் எம்.பி.ஜோதிமணியை அலற விட்ட வாக்காளர்!
கரூர்: கடந்த நான்கரை ஆண்டுகளாக தங்கள் பகுதியை எட்டிக்கூட பார்க்காமல் இருந்துவிட்டு, இப்ப மட்டும் எதற்கு வந்திருக்கிறீர்கள் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் வாக்காளர் ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் ஓட்டுக்காக இப்போது ஊருக்கு வந்திருக்கீங்க, அப்படித்தானே என வினவி ஜோதிமணி எம்.பி.யை அலறவிட்டார் அந்த வாக்காளர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி எம்.பி. கடந்த 2019 முதல் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகின்றன.
இந்த 6 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்றால் மாதத்தின் பாதி நாட்கள் ஜோதிமணி எம்.பி.யால் வேறு எந்த பணியும் செய்ய முடியாது. பாரத் ஜோடோ யாத்ரா உள்ளிட்ட கட்சிப் பணிகளில் பிசியாக இருக்கும் அவர் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் டெல்லியிலேயே தங்க வேண்டிய சூழல் உள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்கு சுற்றுப்பயணம் சென்ற ஜோதிமணிக்கு அங்கு அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. கிராம மக்களை சந்தித்துவிட்டு புறப்படவிருந்த ஜோதிமணியிடம், வாக்காளர் ஒருவர் நாலரை வருஷமா ஏன் நீங்க எங்க ஊருக்கு வரல. நன்றி சொல்லக் கூட வராத நீங்க இப்ப எதுக்கு வர்ரீங்க என கேள்வி எழுப்பினார்.
இதனால் டென்ஷனான ஜோதிமணி எம்.பி. 6,000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தாம் நன்றி சொல்ல சென்றிருப்பதாகவும் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருக்கும் உங்களுக்கு பதிலளிக்க முடியாது எனவும் கூறிவிட்டு நடையை கட்டினார். இருப்பினும் அந்த வாக்காளர் விடுவதாக இல்லை, தேர்தல் வரவுள்ளதால் ஓட்டுக்காக இப்ப மட்டும் நாங்கள் தெரிகிறோமா எனக் கேட்க அந்த இடம் மேலும் பரபரப்பானது.
இதையடுத்து காவல்துறையினர் சமாதானப்படுத்தி கேள்வி எழுப்பிய நபரையும், காங்கிரஸ் கட்சியினரையும் அனுப்பி வைத்தனர். மக்கள் மிகவும் விழிப்புணர்வாக இருப்பதால் பல தொகுதிகளிலும் சிட்டிங் எம்.பி.க்களின் நிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications