11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த 3 மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. ஓசூர் அருகே அதிர்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 அரசுப் பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் சிறுவர்கள் என்பதால் சேலத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் பகுதியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி ஒருவர், மற்ற சிறுமிகளோடு விளையாடியுள்ளார். அப்போது தண்ணீர் தாகம் எடுக்கவே, தனது தோழியின் வீட்டுக்கு தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள்
பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.

இதையடுத்து, அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில், நடந்த சம்பம் உண்மை எனத் தெரியவந்த நிலையில், 9, 10, 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் 3 மாணவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் சிறுவர்கள் என்பதால் சேலத்தில் உள்ள கூராய்வு மையத்தில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் ஓசூர் பகுதியில் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications