கிருஷ்ணகிரி அருகே முதியவர் அடித்துக் கொலை! 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதியவரைக் கொன்று 60 வயதான அவரது மனைவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி தங்கியிருந்தனர். நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர் ஒருவர் 70 வயது முதியவரின் தலையில் பலமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.

அப்போது அங்கிருந்த அவரது மனைவி 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளார். இந்த நிலையில் காலை விடிந்ததும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அந்த பகுதிவாசிகள் ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரையும் காயங்களுடன் போராடிய அவரது மனைவியையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் முதியவர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். மூதாட்டிக்கு சிகிச்சை தொடர்கிறது.
இந்த மாபாதக செயலை செய்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளியை தேடி வருகிறார்கள்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக தோட்டத்து வீட்டில் வசிக்கும் முதியவர்கள், தனி வசிக்கும் பெண்கள் உள்ளிட்டோரை குறி வைத்து சிலர் தாக்குதல் நடத்தி நகைகளை கொள்ளையடிப்பது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications