Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூரியர் வண்டியில் பெட்டி பெட்டியாக தங்க நாணயங்கள்.. 5 கோடி மதிப்புள்ள தங்கத்தை பிடித்த பறக்கும் படை!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5.88 கோடி மதிப்புள்ள தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும்.

Gold coins worth 5 crore brought in a courier vehicle seized at krishnagiri

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் கண்கணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க பணம் கொடுப்பதை தடுப்பதற்காக சிறப்பு தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்வார்கள்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி - தருமபுரி சாலையில் தனியார் கூரியர் நிறுவன வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 14 பெட்டிகளில் தங்க நாணயங்கள் சிக்கியுள்ளன.

ஓசூர் டைட்டன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் இருந்து திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு இந்த தங்க நாணயங்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டன. பறிமுதல் செல்லப்பட்ட தங்க நாணயத்தின் மதிப்பு ரூபாய் 5 கோடியே 88 லட்சம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த கூரியர் சர்வீஸ் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்க நகைகளை அவர்கள் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து சோதனை மேற்கொண்டனர். கூரியர் சர்வீஸ் வாகனத்தில் மொத்தம் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்த நிலையில், 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய பில் இருந்துள்ளது.

மீதமுள்ள 24 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து 69 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் எனத் தெரிகிறது. இந்த நகைகள் ஓசூர் சார்நிலை கருவூல அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+