Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ணகிரி அங்கன்வாடி மையத்தில் படிக்கும் கலெக்டர் மகள்.. உணவு ஊட்டி, கெஞ்சி.. நெகிழ வைத்த காட்சி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கலெக்டர் சரயுவின் மகள் படித்து வருகிறார். அங்கு கலெக்டர் சரயு ஆய்வு செய்வதற்காக சென்ற போது, தானும் கூட வருவேன் என அவரது மகள் அடம்பிடித்தார். அப்போது கலெக்டர் சரயு தனது மகளை கொஞ்சியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பால் உற்பத்தியாளா் கூட்டமைப்பின் இணை நிா்வாக இயக்குநராக பணியாற்றி வந்த கே.எம்.சரயு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார். இவா், கேரள மாநிலம், கொச்சியைச் சோ்ந்தவா் ஆவார். 1992-ஆம் ஆண்டு பிறந்த சரயு பி.டெக்., எம்.ஏ., பொது மேலாண்மை (பப்ளிக் மேனேஜ்மெண்ட்) படித்துள்ளார். 2015-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று தமிழக கேடர் ஐஏஏஸ் ஆக பணிக்கு தோ்வு பெற்றார்.

Krishnagiri District Collector Sarayus daughter studying in Anganwadi center

புதுக்கோட்டை மாவட்ட சாா் ஆட்சியா், பால் உற்பத்தியாளா் கூட்டமைப்பின் இணை நிா்வாக இயக்குர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய சரயு ஐஏஎஸ், கிருஷ்ணகிரியில் ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். மிகவும் எளிமையானவரான இவர், மக்களிடம் நெருங்கி பழகி குறைகளை கேட்டு வருகிறார்.. மக்களால் எளிதில் அணுகக்கூடியவராகவும் உள்ளார்.

கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட நகர் புறங்களிலும், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, பர்கூர், ராயக்கோட்டை, தளி என கிராமப்புற மற்றும் மலையை ஒட்டிய கிராமப்புற பகுதிகளிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செல்கிறார். இவர் அடிக்கடி ஆய்வு நடத்துவதால் அதிகாரிகளே எப்போது நம்ம ஊருக்கு வருவார் என்று பரபரப்பிலேயே உள்ளார்களாம்.

இந்நிலையில் கலெக்டர் சரயுவின் மகள் நெல்லி, கிருஷ்ணகிரி ஜின்னா ரோடு பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த அங்கன்வாடி மையத்திற்கு திடீரென கலெக்டர் சரயு ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு எப்படி இருக்கிறது. அடிப்படை வசதிகள் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தார், அப்போது அம்மாவை பார்த்ததும் தானும் கூட வருவேன் என்று அவரது குழந்தை அடம் பிடித்தார்..

Krishnagiri District Collector Sarayus daughter studying in Anganwadi center

அப்போது தனது குழந்தையை தூக்கிய கலெக்டர் சரயு, உணவு ஊட்டிவிட்டார். பின்னர் தனக்கு வேலை இருப்பதாக கூறி கொஞ்சினார்.. பின்னர் மகளை சமாதானம் செய்து அங்குவிட்டுவிட்டு சென்றார்.. கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு தனது மகளை கொஞ்சியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+