கிருஷ்ணகிரி புது மாப்பிள்ளை ஜெகன் ஆணவக் கொலை.. சரண்டரான இருவர்.. சூறையாடப்பட்ட மாமனார் வீடு.. பதற்றம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டேம் ரோடு சாலையில் புதுமாப்பிள்ளை கவுரவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இரண்டு பேர் சரண் அடைந்துள்ளனர். முன்னதாக சரண் அடைந்த மாமனாரின் வீட்டை ஜெகனின் உறவினர்கள், நண்பர்கள் சிலர் சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்த சின்னபையன் என்பவரது மகன் ஜெகன் (வயது 25). இவர் அந்த பகுதியில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஆவார். அவதானப்பட்டியை அடுத்து உள்ள முழுக்கான்கொட்டாயை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சரண்யா (21). டைல்ஸ் தொழிலாளியான ஜெகனும், சரண்யாவும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார்கள்.
இவர்களின் காதலுக்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதை மீறி சரண்யா கடந்த ஜனவரி 26-ந் தேதி ஜெகனை காதல் திருமணம் செய்தார். இந்த நிலையில் ஜெகனை கடந்த செவ்வாய்கிழமை அவரது மாமனார் சங்கர் (43) உள்பட சிலர் சேர்ந்து கிருஷ்ணகிரி டேம் ரோடு சாலையில் அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கவுரவக்கொலை செய்தனர். இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாமனார் வீடு
மருமகனை ஆணவ கொலை செய்த சங்கர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் முழுக்கான்கொட்டாயில் உள்ள சங்கரின் வீட்டிற்கு செவ்வாய்கிழமை இரவு ஜெகனின் உறவினர்கள் சென்றார்கள். அங்கு ஆணவ கொலை செய்த சங்கரின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும், வீட்டில் உள்ளே பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

காரசார விவாதம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆணவக் கொலை விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இடையே காரசார விவாதமும் நடந்தது.

சேலத்தில் சரண்
இந்நிலையில் ஜெகன் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நாகராஜ் (21 வயது), ஜிஞ்சுப்பள்ளியைச் சேர்ந்த முனியப்பன் மகன் முரளி (20 வயது) ஆகியோர் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு சரண் அடைந்தனர்.

சரண் அடைகிறோம்
இருவரும் தாக்கல் செய்த மனுவில், எங்கள் மீது காவேரிப்பட்டினம் காவல்துறையினர் சட்டப்பிரிவு 341, 302, 506 (2), ஐபிசியின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் எங்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். எங்களை காவல்துறையினர் தேடிவருவதால், நாங்களாகவே நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளோம்.எங்கள் மனுவை ஏற்க வேண்டும்" என்று கூறியிருந்தனர். இதையடுத்து சரண் அடைந்த இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications