தனியாக இருந்த பெரியம்மா.. தலையை வெட்டி சாய்த்த மகன்.. கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்!
பெரியம்மாவை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்
கிருஷ்ணகிரி: நிலப்பிரச்சனை இருந்ததாம்.. அதற்காக தனியாக இருந்த பெரியம்மாவின் தலையை வெட்டி சாய்த்துவிட்டார் மகன் முத்துவேல்.. இந்த கொடுமை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
போச்சம்பள்ளி அடுத்த என்.தட்டக்கல் என்ற கிராமத்துக்கு பக்கத்தில் பூசாரிகொட்டாய் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் செல்வம்.. இவர் ஒரு விவசாயி.. இவரது மனைவி துளசி.. 50 வயதாகிறது.

அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் முத்துவேல்.. 28 வயதாகிறது.. சம்பவத்தன்று மதியம் துளசி நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.. அப்போது திடீரென முத்துவேல், பின்னாடியே வந்து துளசியின் கழுத்தை வெட்டிவிட்டார்.. இதில் அங்கேயே சரிந்து விழுந்து துளசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துளசியுடன் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் இதை பார்த்து அலறி அடித்து ஓடினர்.. தகவலறிந்து நாகரசம்பட்டி போலீசாரும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால், அதற்குள் முத்துவேல் எஸ்கேப் ஆகிவிட்டார்.
போலீசார் துளசியின் சடலத்தை கைப்பற்றி தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. முத்துவேல், துளசி இரு குடும்பத்தினரும் உறவினர்கள்.. துளசி முத்துவேலுக்கு பெரியம்மா ஆவார்.. இவர்களுக்குள் ரொம்ப காலமாகவே பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சனை இருந்ததாக தெரிய வருகிறது.
இதில் சுமூக முடிவு எட்டப்படாததால்தான், ஆத்திரமடைந்த முத்துவேல் தனியாக இருந்த பெரியம்மா கழுத்தை கத்தியால் வெட்டியது தெரியவந்தது. இது சம்மந்தமாக நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவேலை தேடி வந்த நிலையில், நேற்று தற்போது கைது செய்துள்ளனர்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications