பாஜக உள்ளவரை தமிழகத்தை ஸ்டாலினால் ஆட்சி அமைக்க முடியாது.. முரளிதர ராவ்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் பாஜக உள்ளவரை ஸ்டாலினால் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஏராளமானோர் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு வரி இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால் வனவாசம் செல்ல தயார்.
இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு முக ஸ்டாலின் கைப்பாவையாக இருக்கிறார். தமிழகத்தில் திமுக முன் வைக்கும் எந்தப் பொய் பரப்புரைகளும் எடுபடாது.
பாரதிய ஜனதா உள்ளவரை தமிழகத்தில் முக ஸ்டாலினால் முதல்வராக முடியாது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications