Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோ பைடனை தொடர்ந்து.. இஸ்ரேலுக்கு சென்றார் ரிஷி சுனக்.. வைக்க போகும் முக்கிய டிமாண்ட் என்ன?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினர் இடையே 13-வது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

After US president UK PM Rishi Sunak will visit Israel today

இந்த தாக்குதலால் ஒரு நிமிடம் இஸ்ரேல் அதிர்ந்து போனது. இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக தொடுத்தது. இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 5 முறை போர் ஏற்பட்டு இருந்தாலும் இதுவரை அல்லாத அளவுக்கு தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த போர் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த போரினால் அப்பாவி மக்கள் பலியாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

காசா மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலையும் நடத்த தயாராகி வருகிறது. இதற்கிடையே, தான் காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டது உலகையே அதிர வைத்தது. இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று ஹமாஸ் அமைப்பினர் குற்றம் சாட்டினர். ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மீது கை காட்டியது.

இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் உக்கிரம் அடைந்து உள்ள நிலையில், இஸ்ரேலுக்கான ஆதரவை தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசிய ஜோ பைடன், ஹமாஸ் அமைப்பினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள்.

இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அமெரிக்கா உறுதி செய்யும். காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.832 கோடி) நிதியுதவியை அமெரிக்கா அளிக்கும்" என்றார். இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதல் 13-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் தான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார்.

இன்று பிற்பகலில் இஸ்ரேலுக்கு சென்றடடைந்தார் ரிஷி சுனக். தொடர்ந்து அவர் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் இசாக் ஹெர்சோக் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். முன்னதாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டிற்கு செல்ல உள்ளதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ரிஷி சுனக் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களின் ஒவ்வொரு உயிர் பலி போவதும் கொடூரமானது.

ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலால் பல உயிர்கள் பறி போயிருக்கின்றன" என்று கூறியிருந்தார். அதேபோல், காசாவில் மனிதாபிமான வழித்தடத்தை திறக்க வேண்டும் எனவும் காசாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து நாட்டினரை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் வலியுறுத்துவார் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+