முதல் பலி.. ஓமிக்ரான் காரணமாக யு.கேவில் முதல் நபர் பலி.. மக்களுக்கு போரிஸ் ஜான்சன் கடும் வார்னிங்
லண்டன்; யு. கேவில் ஓமிக்ரான் கொரோனா காரணமாக முதல் பலி ஏற்பட்டுள்ளது என்று யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ஓமிக்ரான் பரவல் உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது. பெரிய அளவில் மரணங்கள் ஏற்படவில்லை என்றாலும் கூட கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்தியாவில் 38 பேரிடம் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் வேகம் காரணமாக கேஸ்கள் இன்னும் உயரும் என்ற அச்சம் உள்ளது.

ஓமிக்ரான் வேகம் '
தற்போது யு.கேவில் ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 27ம் தேதி ஓமிக்ரான் யு.கேவில் கண்டறியப்பட்டது. அப்போது தொடங்கிய கேஸ்கள், தற்போது அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் அங்கு பதிவான புதிய கேஸ்களில் 40 சதவிகித கேஸ்கள் ஓமிக்ரான் வகை கேஸ்கள் ஆகும். அங்கு 600க்கும் அதிகமானோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிகம்
ஓமிக்ரான் கொரோனா காரணமாக யு.கேவில் ஏப்ரலுக்குள் 75 ஆயிரம் பேர் வரை பலியாக வாய்ப்பு உள்ளதாகவும் London School of Hygiene and Tropical Medicine நடத்திய ஆய்வு அறிக்கை சொல்கிறது. இந்த நிலையில்தான், யு. கேவில் ஓமிக்ரான் கொரோனா காரணமாக முதல் பலி ஏற்பட்டுள்ளது என்று யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஓமிக்ரான் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவமனையில் பலியானார்.

யுகே கொரோனா மரணம்
இது தொடர்பாக யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் அளித்துள்ள பேட்டியில், ஓமிக்ரான் ஆபத்தானது, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் ஓமிக்ரான் காரணமாக மக்கள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒருவர் தற்போது நமது நாட்டில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளார். இது வேண்டுமென்றால் கொஞ்சம் வலிமை குறைந்த கொரோனா வகையாக இருக்கலாம்.
Recommended Video

ஓமிக்ரான் மரணம்
ஆனால் இது பரவும் வேகத்தை நாம் குறைத்து மதிப்பிட்டு விட கூடாது. மக்கள் இடையே மிக அதிக வேகத்தில் ஓமிக்ரான் கொரோனா பரவி வருகிறது. இதனால் மக்கள் உடனடியாக வேக்சின் போட வேண்டும். வேக்சின் போட்டவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும் என்று யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications