ChAdOx1 nCoV-19 கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சம்.. ஆக்ஸ்போர்டு பல்கலை. ஆய்வின் சிறப்பு
லண்டன்: கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஆரம்ப கட்ட வெற்றியை பெற்றுள்ளதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த மருந்து இரு பலன்களை வழங்கக் கூடியது என்று தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிரிட்டன் அரசின் உதவியுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து, இந்த தடுப்பூசியை தயாரித்து பரிசோதித்து வருகின்றது.
இந்த தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் 3ம் கட்ட பரிசோதனை அண்மையில் துவங்கியது.

1077 பேருக்கு தடுப்பூசி
இதன் ஆரம்ப கட்ட பரிசோதனை முடிவுகள் குறித்து இன்று தகவல் வெளியாகியுள்ளது. 1,077 பேருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. மேலும், கொரோனா வைரசை எதிர்த்து போரிடும் வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்கிறது.

பணிகள் உள்ளன
ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் சாரா கில்பர்ட் கூறுகையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எங்கள் தடுப்பூசி உதவுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பணிகள் உள்ளன. இருப்பினும், இந்த ஆரம்ப முடிவுகள் நமக்கு நம்பகத்தன்மையை அளித்துள்ளன என்று கூறினார்.

இரு நன்மைகள்
உலகம் முழுக்க 140 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி முக்கியமானது. வித்தியாசமானது. இதற்கு காரணம், இந்த தடுப்பூசியின் இரட்டைப் பாதுகாப்பு அம்சங்கள்தான். இந்த ஊசிமருந்தைச் செலுத்தும் போது , உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆன்ட்டி-பாடிக்கள் அதிகரிக்கிறது. மேலும், மனித உடலில் வைரஸை உருவாக்கும் செல்களை அழிக்கும் திறமை கொண்ட கில்லர் டி-செல்களையும் உருவாக்குகிறது.

பக்க விளைவு இல்லை
ChAdOx1 nCoV-19 என்பது, இந்தத் தடுப்பூசியின் பெயர். இதை பரிசோத்து பார்த்தபோது, தலைவலி உள்ளிட்ட சாதாரண சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இது சில தடுப்பூசிகளுக்கு ஏற்படக் கூடிய பக்க விளைவுதான். ஆனால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆக்ஸ்போர்டு ஆய்வு நல்ல ரிசல்ட்டை காட்டுவதை அறிந்து, இந்த தடுப்பூசியை 100 மில்லியன் செலவிட்டு வாங்குவதற்கு பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது. இந்த தடுப்பூசியினால் பெரிய அளவில் மனித உடலில் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications