அடேங்கப்பா.. பிரிட்டன் மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? அசந்தே போயிடுவீங்க
லண்டன்: பிரிட்டன் ராணியாக இருந்த 2ம் எலிசபெத் காலமானதை அடுத்து பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மகன் 3ம் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக முடிசூட்டி கொள்கிறார். இதனால், பிரிட்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரிட்டன் மன்னரான அவரது சொத்து மதிப்பு வருமானம் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி 2ம் எலிசபெத். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 96-வது வயதில் உயிரிழந்தார். அதன்பிறகு ராணி 2 ஆம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னரானார். 3 ஆம் சார்லஸ் என்று அழைக்கப்படும் அவருக்கு முடிசூட்டும் விழா இன்று நடைபெறுகிறது.

பிரிட்டனில் 70 ஆண்டுகள் கழித்து தற்போது முடிசூட்டு விழா நடைபெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கோலாகலமாக இந்த விழா நடைபெறுகிறது. மொத்த பிரிட்டனும் விழாக்கோலம் பூண்டுள்ளது என்று சொல்லும் அளவுக்கு அங்கு உற்சாகம் காணப்படுகிறது.
இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணிக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தேவாலயத்துக்குள் நுழைந்தவுடன் முடிசூட்டு விழா தொடங்குகிறது. இந்த விழாவை மிகவும் கோலாகலமாக நடத்த பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. உலக நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா சார்பில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார். அதேபோல் இவ்விழாவில் அமெரிக்காவின் சார்பில் அதிபர் ஜோ பைடனுக்கு பதில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்கிறார். இப்படி மன்னரின் முடி சூட்டு விழா ஒரு பெரும் திருவிழா போல அந்நாட்டில் இன்று கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பிரிட்டன் மன்னரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.
1990 ஆம் ஆண்டு சார்லஸ் பிஸ்கட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். பிறகு இது பிற பொருட்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக விரிவு படுத்தப்பட்டது. இதன் உற்பத்தி பொருட்கள் பிரத்யேகமாக அங்குள்ள Waitrose சூப்பர் மார்க்கெட்டில் மட்டுமே விற்அனை செய்யப்பட்டது. இந்த பிராண்டின் கடந்த ஆண்டு வருமானம் 4 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
இந்த தொகை முழுவதும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. அதேபோல ட்ச்சி ஆப் கார்ன்வால் எஸ்டேட் கட்டுப்பாடும் மன்னர் வாரிசு என்ற அடிப்படையில் சார்லஸ் வசமே இருக்கும். இதன் மதிப்பு மட்டும் 1.3 பில்லியன் டாலர் என்று வால்ஸ் ஸ்டீரிட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் சுமார் 1,30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இது உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இதன் நிகர மதிப்பு மேலும் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த எஸ்டேட்டில் இருந்து சார்லஸ்க்கு 28.3 மில்லியன் டாலர் வருமானம் கடந்த ஆண்டு வந்துள்ளது. இது போக 800 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட தி டச்சி ஆஃப் லாங்காஸ்டரும் சார்லஸ்க்கு சொந்தமாக உள்ளது. இது 45 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வணிக, விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளைக் கொண்டது.
இதன் மூலம் கிடைக்கும் பணம் அரச குடும்பத்திற்கு தனிப்பட்ட வருமானமாக செல்கிறது. மன்னர் சார்லஸ் தனது வருமானத்திற்கு எதுவும் வரி கட்ட தேவையில்லை. எனினும் தனது தாயாரும் ராணி 2 ஆம் எலிசபெத்தை பின்பற்றி சார்லஸ் வருமான வரி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோக பிரிட்டன் அரச குடும்பத்திற்கு ஆண்டுதோறும் செலுத்தப்படும் இறையாண்மை கிராண்ட் எனப்படும் வரி செலுத்துவோர் மூலம் வருமானம் கிடைக்கும். இந்த வரியானது பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு ஆண்டுதோறும் செலுத்தப்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications