"பச்சை துரோகம்".. வில்லியாக மாறிய லில்லி.. செமையாக பழி தீர்த்த பெண்.. அதற்காக இப்படியா செய்வாங்க!
ஏமாற்றிய காதலனை வித்தியாசமான முறையில் பழி வாங்கினார் காதலி
லண்டன்: இந்த கள்ளக்காதல் சமாச்சாரம் நம்ம ஊர் போலவே, உலக அளவில் வியாபித்து கிடக்கும் போல தெரிகிறது.. தனக்கு துரோகம் செய்தவனை, காதலி உண்டு இல்லை என்று செய்துவிடுவதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல!
பிரிட்டனை சேர்ந்தவர் நாதன் ஸ்மித்.. இவர் லவுரன் லில்லி என்ற பெண்ணை காதலித்தார்.. 2 வருட காதல் இது.. உருகி உருகி காதலித்திருக்கிறார்கள்.. இதில் லில்லிதான் தன் காதலன் மீது ஓவர் லவ்-ஆக இருந்திருக்கிறார்.
இதை பார்த்த லில்லியின் நண்பர்கள், இவ்வளவு பாசம் வைக்காதே.. ஸ்மித் அந்த அளவுக்கு நல்லவர் இல்லை, காதலை விட்டுவிடு என்று அட்வைஸ் தந்திருக்கிறார்கள்.
காதல்
ஆனால், நண்பர்கள் எவ்வளவு சொல்லியும் லில்லி கேட்கவே இல்லை... காதல் கண்ணை மட்டுமல்ல, லில்லியின் மூளையையும் சேர்த்தே மறைத்துவிட்டது. கொஞ்ச நாள் கழித்து, ஸ்மித்தின் நடவடிக்கையில் லேசான மாற்றத்தை கவனித்தார் லில்லி.. தன்னிடம் சரியாக பேசாதது, வெளியில் அழைத்து செல்லாதது போன்றவைகளை எல்லாம் வைத்து சந்தேகம் கூடிக் கொண்டே போனது.. அதனால், ஒருநாள் திடீரென ஸ்மித் தூங்கியபிறகு, அவரது செல்போனை எடுத்து செக் செய்து பார்த்தார்.
சண்டை
அப்போதுதான், இன்னொரு பெண்ணுடன் ஸ்மித் படுநெருக்கமாக இருக்கும் வீடியோவை பார்த்து அதிர்ந்து போனார்.. அவ்வளவுதான்.. சண்டை ஆரம்பமானது.. அப்போது தூங்கியதுதான் ஸ்மித்.. அதற்கு பிறகு தூக்கம் என்பதே காணாமல் போய்விட்டது.. அந்த அளவுக்கு டார்ச்சரை ஆரம்பித்தார் லில்லி... இறுதியில், அந்த பெண்ணுடன் பழக்கம் இருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொள்ளும்வரை விடவே இல்லை.. உண்மை தெரிந்ததும் கதறி அழுதவாறே, அவரை விட்டு பிரிந்தார் லில்லி.
பழிவாங்கினார்
ஆனால், ஸ்மித்தை மறக்கவே முடியவில்லை.. உண்மையாக நேசித்தும் இப்படி துரோகம் செய்துவிட்டாரே என்று தினமும் அழுது கொண்டே இருந்தார்.. ஒருகட்டத்தில் ஸ்மித்தை பழிவாங்கவும் முடிவு செய்தார்.. அதற்கு காரணம், தன்னை போல வேறு எந்த பெண்ணும் ஸ்மித்தால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். அப்போது தான், ஸ்மித்தின் அமேசான் அக்கவுண்ட் தன்னிடம் இருப்பது லில்லிக்கு ஞாபகம் வந்தது.. அதை வைத்து ஸ்மித்தை பழி வாங்க நினைத்தார்..
துரோகம்
அமேசானில் "துரோகம்" என்ற பெயர் வரும் வகையில் இருக்கும், சீட்டர், டிசைட்புல், லைய்யர் என்ற இங்கிலீஷ் உட்பட அனைத்து மொழிகளிலிலும் இருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை 500 டாலருக்கு வாங்கி குவித்து விட்டார். தன்னுடைய அக்கவுண்ட்டில் திடீரென பணம் குறைவதை கண்டு ஸ்மித் ஆடிப்போய்விட்டார்.. அப்போதுதான் தன்னுடைய கார்டு லில்லியிடம் இருப்பது தெரியவந்தது..
நிம்மதி
அதனால் லில்லிக்கு போன் செய்து அதை பற்றி கேட்டார்.. "ஆமாம்.. நான் தான் பணம் செலவு செய்தேன்.. நீ நல்லவன் இல்லை.. இனிமேல் எந்த பெண்களின் வாழ்க்கையிலும் இப்படி விளையாடாதே... நீ எனக்கு செய்த துரோகத்துக்கு இதான் தண்டனை" என்று ஆவேசமாக பேசிவிட்டு, அத்துடன் அந்த போனையும் கட் செய்துவிட்டார். இப்போது ஸ்மித் மேலும் உறைந்துபோய் நின்றார்.. லில்லி இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளார்..!