Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்.. ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து இடையே நீண்ட காலம் நல்லுறவு பேணப்பட்டு வரும் நிலையில், இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றுள்ளார். விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தனது லண்டன் பயணத்தின்போது அவர் இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றுள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையே நீண்ட காலம் நல்லுறவு பேணப்பட்டு வரும் நிலையில், இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

pm-modi-arrives-in-london-for-key-talks-on-trade-and-security

பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்

நேற்று அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தனது லண்டன் பயணத்தின்போது அவர் இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து பயணம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில், 'இந்தியாவும், இங்கிலாந்தும் விரிவான உறவுகளை பகிர்ந்து வருகின்றன. இது சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பானது, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரவியுள்ளது' என்று கூறியிருந்தார்.

ஒப்பந்தம் கையெழுத்து

பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய அம்சமாக, இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. இரு நாடுகளும் 3 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியதன் இறுதியில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இங்கிலாந்துக்கு 99 சதவீத இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு வரி இருக்காது. இங்கிலாந்து நிறுவனங்கள் விஸ்கி, கார் மற்றும் இதர பொருட்களை இந்தியாவுக்கு எளிதாக ஏற்றுமதி செய்யும். இங்கிலாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து அங்கிருந்து மாலத்தீவு செல்கிறார்.

மாலத்தீவு செல்கிறார் மோடி

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அழைப்பின்பேரில் 25, 26-ந் தேதிகளில் அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார். மாலத்தீவு நாட்டின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டங்களிலும் பங்கேற்கிறார். மாலத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து இந்தியாவுக்கும் அந்நாட்டிற்குமான உறவில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது அதிபராக இருக்க கூடிய முகமது முய்சு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக அறியப்படுகிறார்.

இதனால், இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை முகம்மது முய்சு அரசு எடுத்தது. இதற்கு மத்தியில் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து இன ரீதியாக மாலத்தீவு முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. அதன்பிறகு சமீப காலமாக இந்தியாவுடன் இணக்காமான போக்கை மாலத்தீவு கடைப்பிடிக்க தொடங்கியிருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+