நிர்வாணமாக கால்வாயில் மிதந்து வந்த இளம் பெண் உடல்.. உ.பியில் இன்னும் ஒரு கொடூரம்.. ஷாக்!
லக்னோ: நிர்வாணமாக இளம்பெண்ணின் சடலம் கால்வாயில் மிதந்து வந்ததை பார்த்து ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. கொடுமையின் உச்சமான உபியில்தான இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.. படிப்பறிவில்லாத காரணங்கள், அதீத மூடபழக்கவழக்கங்கள், நாகரீக வளர்ச்சி இல்லாதவை, சாதீய உக்கிரம் போன்ற காரணங்களால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகமாக கட்டவிழ்த்துவிடப்பட்டு கொண்டே இருக்கின்றன.

இன்னும் ஹத்ராஸ் சம்பவத்துக்கே விடிவு கிடைக்காத நிலையில், அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து மக்களை நிலைகுலைய வைத்து வருகின்றன.. இப்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த 17 வயசு இளம்பெண் அவர்.. அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞரை காதலித்து வந்தார்.. இருவருமே உயிருக்கு உயிராக காதலித்தவர்கள்.. .அதனால் ஹோட்டல்,சினிமா என்று ஜாலியாக சுற்றி வந்தனர்.. இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. அதனால் மகளை கண்டித்தனர்.. காதலுக்கும் எதிர்ப்பு சொன்னார்கள்.
குடும்ப சூழலை எடுத்து சொல்லவும், அந்த பெண், காதலை கைவிட முடிவெடுத்தார்.. அடுத்த சில தினங்களில் காதலனை சந்திப்பதையும் தவிர்த்தார். இதனிடையே காதலியிடம் பேச முடியாமல் காதலன் தவித்துள்ளார்.. பல முறை போன் செய்தும், அந்த பெண் அதை அட்டண்ட் செய்யவில்லை.. மெசேஜ் அனுப்பியும் பதில் இல்லை.. இதனால் காதலன் ஆத்திரமடைந்தார்.
தன்னுடைய நண்பர்களை சிலரை சேர்ந்து, அந்த பெண்ணை கடத்திவிட்டார்.. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வைத்து, காதலியை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்தார் அந்த இளைஞர்.. இறுதியில் விஷயத்தை வெளியே சொன்னால் ஆபத்து என்பதால், அங்கேயே காதலியை கொன்று, சடலத்தை ஒரு கால்வாயில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
கால்வாயில் நீர் நிறைந்து காணப்படுவதால், நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மிதந்தபடியே வந்துள்ளது.. இதை பார்த்த அந்த பகுதி போலீசுக்கு தகவல் சொல்லவும் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்.. அந்த ரிப்போர்ட்டில்தான் பெண் மிக கொடூரமாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்தனர்.. அவர்கள் மீது கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.. நாளுக்கு நாள் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவதாலும், குற்றங்கள் மிகுந்து வருவதாலும் யோகி அரசுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications