திருமண ஆசை காட்டி பெண்ணுடன் உல்லாசம்.. பேட்டியளித்தபோதே காங்கிரஸ் எம்பியை தட்டித்தூக்கிய போலீஸ்
லக்னோ: திருமணம் செய்வதாக கூறி 4 ஆண்டுகளாக உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரில் உத்தர பிரதேச மாநிலம் சிதாபூர் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்பி ராகேஷ் ராதோர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது உள்ளே நுழைந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் லோக்சபா தொகுதி எம்பியாக இருப்பவர் ராகேஷ் ராதோர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் வந்து சேர்ந்து ராகேஷ் ராதோர் எம்பியாகி உள்ளார். அதோடு உத்தர பிரதேச மாநில காங்கிர் கட்சியின் பொது செயலாளராகவும் ராகேஷ் ராதோர் செயல்பட்டு வருகிறார்.

ராகேஷ் ராதோருக்கு இப்போது 60 வயது ஆகிறது. இந்நிலையில் தான் கடந்த 17 ம் தேதி ராகேஷ் ராதோருக்கு எதிராக பெண் ஒருவர் பரபரப்பான பாலியல் புகாரை முன்வைத்தார்.
இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரில், ‛‛ராகேஷ் ராதோர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அதோடு அரசியலிலும் நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் செல்போன் பேச்சு தொடர்பான ஆதாரங்களை அவர் வழங்கினார்.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பயந்து போன ராகேஷ் ராதோர் வழக்கில் முன்ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலையில் காங்கிரஸ் எம்பி ராகேஷ் ராதோர் தனது இல்லத்தில் சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அங்கு வந்த போலீசார் அவரை தங்களுடன் வரும்படி அழைத்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் போலீசார் காங்கிரஸ் எம்பி ராகேஷ் ராதோரை அதிரடியாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகேஷ் ராதோரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications