சி.ஏ.ஏ. வன்முறை: 28 பேருக்கு ரூ15 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உ.பி. அரசு அதிரடி நோட்டீஸ்
லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களின் போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக கூறி 28 பேரிடம் ரூ15 லட்சம் நஷ்ட ஈடு கோரி உத்தரப்பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன. இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர்.

பல இடங்களில் பேருந்துகள், போலீஸ் வாகனங்கள், போலீஸ் தடுப்புகள் உள்ளிட்டவையும் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக எற்கனவே கருத்து தெரிவித்திருந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தக்க பதிலடி தருவோம் என தெரிவித்திருந்தார்.
இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டோர் உள்ளிட்ட 28 பேருக்கு உ,பி. அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதால் ரூ14.86 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக நோட்டீஸ் பெறப்பட்டுள்ளோரின் உறவினர்கள் கூறுகையில், அன்றாட கூலி வேலை செய்பவர்கள்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமீனில் எடுப்பதற்கு வழக்கறிஞருக்கு தருவதற்கு கூட பணம் இல்லாத நிலையில் அரசு கேட்கும் தொகையை எப்படி செலுத்துவது? என குமுறி உள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications