மோடி ராமர்.. ராகுல் ராவணன்.. பிரியங்கா காந்தி சூர்ப்பனகை.. பாஜக எம்எல்ஏவின் "நவீன ராமாயணம்"
லக்னோ: மோடி ராமர், ராகுல் காந்தி ராவணன், பிரியங்கா காந்தி சூர்ப்பநகை என பாஜக எம்எல்ஏ ஒருவர் "நவீன ராமாயணத்தை" உருவாக்கியுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக மறைமுக அரசியலில் இருந்து வந்த பிரியங்கா காந்தி, கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அந்த மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சிகளாக உள்ள சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து காங்கிரஸை நட்டாற்றில் விட்டு விட்டன.
இதனால் பாஜகவுக்கு எதிராக பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே பாட்னாவில் ராகுல் காந்தியை ராமர் போல் சித்தரித்து போஸ்டர்கள் அடிக்கப்பட்டிருந்தன.
பரியம் தொகுதி
அவற்றை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் பரியம் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் பேசினார்.
ராவணன்
அவர் பேசுகையில் ராகுல் காந்தி ராமர் அல்ல. ராவணன். அவரது சகோதரி பிரியங்கா காந்தி சூர்ப்பனகை. ராமர் யாரு தெரியுமா. அது மோடிஜி.
பிரியங்கா காந்தி
அமித்ஷாவும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ராமரின் சகோதரர்கள் ஆவார்கள். ராமருக்கு எதிராக தனது சகோதரி சூர்ப்பநகையை ராவணன் களம் இறக்கியது போல் ராகுல் பிரியங்கா காந்தியை மோடிக்கு எதிராக இறக்கியுள்ளார்.
தோல்வி
ஆனால் நடக்க போவது என்ன தெரியுமா, ராவணனை வீழ்த்தி ராமர் இலங்கையை கைப்பற்றியது போல் மோடியும் உத்தரப்பிரதேசத்தை தன் வசமாக்கிக் கொள்வார். இதில் பிரியங்கா மூக்கறுப்பட்டு ஓடப் போகிறார் என்று தெரிவித்துள்ளார்.