சிஏஏ எதிர்ப்பு.. உ.பியில் வைத்து கைது செய்யப்பட்ட கண்ணன் கோபிநாத்.. பின்னணியில் என்ன நடந்தது?
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்காக உத்தர பிரதேசம் சென்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் அம்மாநில போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்காக உத்தர பிரதேசம் சென்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் அம்மாநில போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். தான் போலீசால் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது குறித்து அவர் டிவிட்டரில் ஆதாரங்களுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது.
இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை நாடு முழுக்க பல்வேறு இடங்களில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் முன்னின்று நடத்தி வருகிறார். அரசுக்கு எதிராக இவர் மிக முக்கியமான முகமாக உருவெடுத்துள்ளார்.

யார் இவர்
மத்திய அரசின் ஐஏஎஸ் பிரிவில் இருந்த இவர் டாமன் டையூ யூனியன் பிரதேசத்தில் பணியாற்றி வந்தார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது எதிராக குரல் கொடுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பதவியில் இருந்து விலகினார். அப்போதில் இருந்து போராட்டங்களை செய்வது, மக்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.
|
எங்கு சென்றார்
இந்த நிலையில்தான் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்காக உத்தர பிரதேசம் சென்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் அம்மாநில போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் கலந்து கொள்ள கண்ணன் கோபிநாத் சென்றார். ஆனால் அவரை ஆக்ராவில் வைத்து போலீஸ் அப்புறப்படுத்தி உள்ளனர்.
— Kannan Gopinathan (@naukarshah) January 4, 2020 |
என்ன டிவிட்
தான் போலீசால் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது குறித்து அவர் டிவிட்டரில் ஆதாரங்களுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். என்னை ஆக்ராவில் வைத்து போலீஸ் அப்புறப்படுத்தியது. ஆனால் அவர்களிடம் அலிகார்க்கில் வைத்து அப்புறப்படுத்த மட்டுமே உத்தரவிடப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.
|
எங்கே சென்றனர்
அவரை அப்புறப்படுத்திய போலீசார் அங்கிருந்து ஹோட்டல் ஒன்றை நோக்கி சென்றுள்ளனர். ஆனால் அவரை அழைத்துக் கொண்டு, அவர்கள் போலீஸ் நிலையம் எங்கேயும் செல்லவில்லை. கடைசியாக அவரை தாபா ஒன்றை நோக்கி அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு உணவு சாப்பிட்டு இருக்கிறார்கள்.
|
சாப்பாடு
போலீஸ் தன்னிடம் மரியாதையாக நடக்கிறது. ஆனால் தன்னை அவர்கள் எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கண்ணன் கோபிநாத் தெரிவித்துள்ளார். அலிகார் பல்கலைக்கழக போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்று இவருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|
ஆனால் என்ன
ஆனால் அதை கண்ணன் கோபிநாத், நான் கண்டிப்பாக அலிகார் செல்வேன் என்று டிவிட் செய்தார். இதனால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் கடந்த டிசம்பர் 13ம் தேதி மும்பையில் கண்ணன் கோபிநாத் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications