இனிமேல் எங்கும் பாஜக கொடிதான்.. எந்த கட்சியாலும் தோற்கடிக்கவே முடியாது.. உபி முதல்வர் யோகி பெருமிதம்
இனி வரும் காலங்களில் பாஜகவே வெற்றி பெறும் என்று யோகி தெரிவித்துள்ளார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும் எல்லா தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நேற்று, பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மணிப்பூர், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின.. அதில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதே, ஏராளமான தொகுதிகளில் பாஜக கூட்டணியே முன்னிலையில் இருந்து வந்தது.

ஆனால் பீகாரில் மட்டும், சரிக்கு சரி சமானமாக இரு கூட்டணி கட்சிகளுமே போட்டி போட்டுக் கொண்டு முன்னிலை வகித்தது.. விடிய விடிய நடந்த பரபரப்பில் இறுதியில் பாஜக கூட்டணியே வெற்றி வாகை சூடி உள்ளது.
அதுபோல, மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்றத் தேர்தலில் 22 தொகுதிகளில் பாஜகவும் 6 தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளது.
தெலங்கானா, குஜராத் இடைத்தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.. அதேபோல, மணிப்பூரில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 4 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த நிலையில், இதில் 6 தொகுதிகளில் பாஜகவே மாஸ் வெற்றி பெற்றிருக்கிறது..
பீகார் வெற்றிக்கு பிறகு இந்த உபி தேர்தல் ரிசல்ட்தான் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.. காங்கிரஸ் கோட்டையான உபியில், மறுபடியும் பாஜக தன் பலத்தை நிரூபித்துள்ளது.. இந்த வெற்றி தொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "இடைத்தேர்தலில் பாஜக எதிர்பார்த்தது போல பெரும் வெற்றி பெற்றது... 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வென்றதை போலவே இப்போதைய இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இனிவரும் எல்லா தேர்தல்களிலும் பா.ஜ.கவே வெல்லும். எந்தக் கட்சியாலும் தோற்கடிக்க முடியாது" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications