திருமணத்திற்காக "அதை" செய்வதா.. ஏற்கவே முடியாது.. அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி!
திருமணத்துக்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது
லக்னோ: "இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவர், கல்யாணம் செய்து கொள்வதற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது" என்று அலகாபாத் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு வழக்கில் இன்று மிக முக்கியமான விஷயம் சொல்லப்பட்டுள்ளது.. இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் இந்து நபரை கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.. அதற்காக ஒரு மாசத்துக்கு முன்பு இந்து மதத்துக்கும் மாறி இருக்கிறார்.
மதம் மாறி கல்யாணமும் நடந்துவிட்டது.. பிறகு அந்த தம்பதி, பாதுகாப்பு கேட்டு அலகாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.. அந்த வழக்குதான் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி மகேஷ் சந்திரா திரிபாதி இதனை விசாரித்தார்.. அப்போது, கல்யாணம் செய்து கொள்வதற்காக மதம் மாறுவதை ஏற்று கொள்ள முடியாது என்று சொல்லி, 2014-ம் ஆண்டு நூர்ஜஹான் பேகம், அஞ்சலி மிஸ்ராவின் வழக்கையும் சுட்டி காட்டினார்.. இந்த விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் சட்டப்பிரிவு 226-ல் தலையிடுவதை விரும்பவில்லை என்றுகூறி, அந்த தம்பதியின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
இதில் 2014-ல் நடந்த வழக்கு என்னவென்றால், நூர்ஜஹான் பேகம் என்ற பெண்ணும் இப்படித்தான் இந்து மதத்திலிருந்து மதம் மாறி, இஸ்லாமியர் ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார்.. இதுபோலவே அந்த தம்பதியும் பாதுகாப்பு கேட்டு, இதே அலகாபாத் ஹைகோர்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒரு இஸ்லாமியரை கல்யாணம் செய்து கொள்ள, ஒரு இந்து பெண், இஸ்லாம் குறித்து எது ஒன்றையுமே தெரிந்துகொள்ளாமல், கல்யாணத்துக்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா?" என்று கேள்வி எழுப்பினர்.. அத்துடன் அந்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டனர்.. அதுபோலவே இந்த வழக்கிலும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications