லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வெறித்தனம்".. புடவை மாற்ற மணமகள் ரூமுக்கு சென்ற பெண்.. பின்னாடியே போன இளைஞர்.. திடீர்னு ஒரே அலறல்

துப்பாக்கியை எடுத்து காதலியை மணமேடையிலேயே சுட்டுவிட்டார் இளைஞர்

Google Oneindia Tamil News

லக்னோ: காதல் தோல்வியின் விரக்தியானது, ஒருவரை எந்த அளவுக்கு கொண்டு போய் விட்டுவிடும் என்பதற்கு உதாரணம்தான் இந்த செய்தி.

உத்தரபிரதேசத்தில் நாளுக்கு நாள் வன்முறைகள் வெடித்து கிளம்பி வருகின்றன.. பெண் பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகி கொண்டிருக்கும் இந்த சூழலில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

5 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.. தீயாய் வீசும் காற்று.. டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை 5 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.. தீயாய் வீசும் காற்று.. டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை

அந்த மாநிலத்தில் நடக்கும் திருமணத்திலும் வன்முறை தலைதூக்கி உள்ளது.. உத்தரபிரதேச மாநிலம் மதுரா பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர்..

முகூர்த்தம்

முகூர்த்தம்

அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிக தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு முபாரிக்பூர் கிராமத்தில் நௌஜீல் பகுதியில் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது.. முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. காதலிக்கு நிச்சயம் ஆன விஷயம் தெரிந்ததில் இருந்து, இளைஞர் அதிர்ச்சியில் இருந்தார்.. கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளானார்..

வெறித்தனம்

வெறித்தனம்


காதலி தன்னை விட்டு போய்விட்டார், இன்னொருத்தருடன் கல்யாணம் ஆக போவதாக அழுது கொண்டே புலம்பி வந்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், திருமண நாளும் வந்தது. தடபுடலான ஏற்பாடுகளை மணமக்கள் சார்பில் மண்டபத்தில் செய்து கொண்டிருந்தார்கள்... . மண்டபத்தில் உறவினர்கள், நண்பர்கள், ஊரே கூடியிருந்தனர்.. மணமக்களுக்கு வரவேற்பு நடந்து முடிந்தது.. மணமகள் வேறு உடையை அணிந்து கொள்ள மணமகள் அறைக்கு சென்றார்.. அந்த நேரம் பார்த்து, அந்த இளைஞர், மண்டபத்திற்குள் வெறித்தனத்துடன் நுழைந்தார்..

 சுருண்டு விழுந்தார்

சுருண்டு விழுந்தார்

மணமகள் அறைக்கு காதலி சென்றபோது, பின்னாடியே சென்ற இளைஞர், கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சரமாரியாக சுட்டார்... இதில் சம்பவ இடத்திலேயே மணமகள் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.,.. துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் உறவினர்கள் அலறி அடித்து கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடினார்கள்.. ஆனால், அதற்குள் மணமகள் இறந்துவிட்டார்.

 ஜெய்மாலா

ஜெய்மாலா

இதுகுறித்து ஏன்ஐ-யிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா குபி ராம் பிரஜாபதி சொல்லும்போது, "என் மகள் "ஜெய் மாலா' திருமண சடங்கு முடிந்து மணமகள் அறைக்கு சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து சுட்டுக்கொன்றுவிட்டார்.. இதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று அழுது கொண்டே சொன்னார்.. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா, போலீசுக்கு சென்று புகாரும் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

English summary
how did the bride die and what happened in uttar pradesh madhura marriage துப்பாக்கியை எடுத்து காதலியை மணமேடையிலேயே சுட்டுவிட்டார் இளைஞர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X