டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும் அரசு திட்டங்கள்! மாஸ் காட்டும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அரசின் திட்டங்கள் அனைத்தும் இனி டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும் என்று மாநில அரசு கூறியுள்ளது. இதன் மூலம் மாநிலம் விரைவில் டிஜிட்டல் மயமாகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் அரசின் திட்டங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உ.பி., மாநிலத்தில் குடும்ப அடையாள அட்டைக்காக பதிவு செய்யப்பட்ட அனைவரும், டெஸ்க்டாப் அல்லது மொபைல் ஃபோன் மூலம் டிஜிலாக்கரை பயன்படுத்தி தங்கள் குடும்ப ஐடியை அணுக முடியும். அதேபோல போலி பயனாளிகளை எளிதாக அடையாளம் கண்டு நீக்க முடியும். அதேபோல நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எளிதாக்கப்படும். இதில் அரசின் திட்டங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இருக்கும். இதனை பயன்படுத்துவது தொடர்பாக விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் டிஜிட்டல் மயமாக்கல் என்பது முக்கியமாகும். எனவேதான் மாநில அரசு இதனை அமல்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது. இது நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பலன்களை கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications