லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று தை அமாவாசை என்பதால் காலை முதலே புனித நீராட திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியாகிவிட்டனர்.
Jan 29, 2025, 10:00 am IST
கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலியான விவகாரம்; யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்
பக்தர்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் நீராடுவதை தவிர்க்குமாறு யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்
திரிவேணி சங்கமத்திற்கு பதில் கங்கையில் நீராடுமாறு யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்
Jan 29, 2025, 8:50 am IST
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் புனித நீராடலுக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியது. பாபா ராம்தேவ், பாஜக எம்பி ஹேமமாலினி உள்ளிட்டோர் புனித நீராடினர்.
Jan 29, 2025, 8:47 am IST
உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராட தற்காலிக தடை விதிப்பு
Jan 29, 2025, 8:32 am IST
தை அமாவாசை அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
கும்பமேளாவில் கூட்டம் அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டு 15 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராட தற்காலிக தடை விதிப்பு
8:50 AM, 29 Jan
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் புனித நீராடலுக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியது. பாபா ராம்தேவ், பாஜக எம்பி ஹேமமாலினி உள்ளிட்டோர் புனித நீராடினர்.
10:00 AM, 29 Jan
கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலியான விவகாரம்; யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்
பக்தர்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் நீராடுவதை தவிர்க்குமாறு யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்
திரிவேணி சங்கமத்திற்கு பதில் கங்கையில் நீராடுமாறு யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்