லக்னோவில் அப்படியே சரிந்த கட்டடம்.. உள்ளே சிக்கிய 35 பேர் கதி என்ன? பூகம்பத்திற்கு பின் ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென சரிந்து விழுந்து மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சமீப காலமாக நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் புத்தாண்டு தினத்தில் தான் அங்குச் சற்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.

இதனிடையே இன்று பிற்பகலில் அங்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக இருந்த இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி மட்டுமின்றி உத்தரப் பிரதேசத்திலும் சில பகுதிகளில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 கட்டிட விபத்து

கட்டிட விபத்து

இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று மாலை உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென சரிந்து விழுந்து மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

 மூவர் பலி

மூவர் பலி

இதுவரை இந்த விபத்தில் சிக்கிய மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், பலர் அங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது மீட்கப்பட்ட அனைவரும் மயக்கமடைந்த நிலையிலேயே இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 உள்ளே சிக்கிய 35 பேர்

உள்ளே சிக்கிய 35 பேர்

இது குறித்த தகவல் கிடைத்தவுடன் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இது குறித்து உத்தரப் பிரதேச டிஜிபி கூறுகையில், "இதுவரை 5 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். அவர்கள் அனைவரும் அதிர்ச்சி இருந்தனர். அவர்களைச் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.. கட்டிடம் இடிந்து விழும் போது இதில் 8 குடும்பத்தினர் இருந்துள்ளனர். உள்ளே 30 முதல் 35 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அஞ்சுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

 சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகள்

சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகள்

தற்போது நடந்து வரும் மீட்புப் பணிகளை முதல்வர் யோகி ஆத்தியநாத் நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் சம்பவ உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ஹஸ்ரத்கஞ்ச் பழமையான கட்டிடங்களால் நிறைந்த ஒரு பகுதியாகும்.. அங்கு தான் இப்போது இந்த விபத்து நடந்துள்ளது.

 உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் படையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மருத்துவமனைகளில் அவர்களுக்கு உரியச் சிகிச்சை கிடையேது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+