சக மாணவர்களுடன் பேசிய 5ஆம் வகுப்பு மாணவி.. சொந்த மகளையே கொடூரமாகக் கொன்ற பெற்றோர்! மிரண்ட போலீசார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது பெற்றோர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் மைனர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் அதிகமாகவே உள்ளது

பெரும்பாலும் சிறுமிகளுக்கு நன்கு தெரிந்த நபர்கள் மூலமே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

இந்தச் சூழலில், உத்தரப் பிரதேச மாநிம் மீருட் அருகே 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது பெற்றோர்களே கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. மேலும், போலீசார் விசாரணையில் இந்தக் கொடூரத்தைச் செய்ய அவர்கள் சொன்ன காரணம் போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

பெற்றோர்

பெற்றோர்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காணாமல் போனதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இப்போது அந்த சிறுமியின் பெற்றோரைக் கைது செய்துள்ளனர். பெற்ற மகளையே கொலை செய்வதற்காகக் கால்வாயில் தள்ளிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

காரணம்

காரணம்

பெற்றோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தங்கள் மகள் பல சிறுவர்களுடன் பேசுவதாகவும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த தம்பதி, பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் அவளைக் கால்வாயில் தள்ளிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், சிறுமியின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை.

 புகார்

புகார்

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கேசவ் குமார் கூறுகையில், "ஐந்தாம் வகுப்பு படிக்கும் தங்கள் மகள் மாயமாகிவிட்டதாக பப்லுவும் அவரது மனைவி ரூபியும் செப்டம்பர் 1ம் தேதி போலீசில் புகார் அளித்தனர். நாங்கள் விசாரணையை நடத்தினோம். அதில் அவர்கள் இருவரும் தான் மகளைக் கால்வாயில் தள்ளியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை நாங்கள் கைது செய்தோம்.

கைது

கைது

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகளைக் கால்வாயில் தள்ளிவிட்டதை ஒப்புக் கொண்ட தம்பதி வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுமியின் உடலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார். பெற்ற மகளை அவரது பெற்றோரே கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+