கூட்டணி கட்சி தலைவர்கள் படை சூழ...பிரதமர் மோடி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல்
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆம் ஆண்டு, முரளி மனோகர் ஜோஷிக்கு பதிலாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலைவிட 3.7லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது 2019 மக்களவை தேர்தலிலும் மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.

பிரம்மாண்ட பேரணி
ஆரத்தி நிகழ்ச்சிவேட்பு மனுதாக்கல் செய்வதற்காக வாரணாசி வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று அந்த நகரத்தையே உலுக்கும் வகையில், மிகப்பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனத்தில் பாஜக தலைவர்களுடன் சென்றார். அதன்பின்னர் கங்கை நதிக்கரையில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.

புல்வாமா தாக்குதல்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மோடி, வாரணாசியில் நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூற முடியாது. ஆனால் அதற்கான முயற்சிகளை எடுத்துள்ளேன். இங்கு ஏராளமான வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. .புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை கொன்றதற்கு பதிலடியாக 42 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றார்.

வேட்புமனு
வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார், சிவசேனை கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமணி அகலிதளம் தலைவர் பிகாஷ்சிங் பாதல், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

காங் வேட்பாளர்
பிரதமர் நரேந்திர மோடியை எதிர்தது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை.. அவருக்கு பதில் சென்ற முறை மோடியை எதிர்த்து போட்டியிட்ட அஜய் ராயையே மீண்டும் காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்கி உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications