கூட்டணி கட்சி தலைவர்கள் படை சூழ...பிரதமர் மோடி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல்
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆம் ஆண்டு, முரளி மனோகர் ஜோஷிக்கு பதிலாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலைவிட 3.7லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது 2019 மக்களவை தேர்தலிலும் மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.

பிரம்மாண்ட பேரணி
ஆரத்தி நிகழ்ச்சிவேட்பு மனுதாக்கல் செய்வதற்காக வாரணாசி வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று அந்த நகரத்தையே உலுக்கும் வகையில், மிகப்பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனத்தில் பாஜக தலைவர்களுடன் சென்றார். அதன்பின்னர் கங்கை நதிக்கரையில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.

புல்வாமா தாக்குதல்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மோடி, வாரணாசியில் நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூற முடியாது. ஆனால் அதற்கான முயற்சிகளை எடுத்துள்ளேன். இங்கு ஏராளமான வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. .புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை கொன்றதற்கு பதிலடியாக 42 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றார்.

வேட்புமனு
வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார், சிவசேனை கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமணி அகலிதளம் தலைவர் பிகாஷ்சிங் பாதல், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

காங் வேட்பாளர்
பிரதமர் நரேந்திர மோடியை எதிர்தது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை.. அவருக்கு பதில் சென்ற முறை மோடியை எதிர்த்து போட்டியிட்ட அஜய் ராயையே மீண்டும் காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்கி உள்ளது.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை!












Click it and Unblock the Notifications