சனாதனம்: உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டினால் ரூ10 கோடி பரிசு-உ.பி. 'கொலைகார' சாமியார் பகீர் அறிவிப்பு
லக்னோ: சனாதனத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ10 கோடி பரிசு தருவேன் என உத்தரப்பிரதேச சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனிதர்களை பிளவுபடுத்துகிற ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிற சனாதன தர்மம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல- ஒழிக்கப்பட வேண்டியது என்பதுதான் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

ஆனால் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய தூண்டிவிட்டார் உதயநிதி ஸ்டாலின் என வட இந்தியா முழுவதும் பாஜகவும் அதன் ஆதரவு ஊடகங்களும் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. பாஜக இதனை லோக்சபா தேர்தலுக்கான பிரசாரமாக கையில் எடுத்திருக்கிறது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் கருத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தாம் பேசியது சரிதான். அதில் தவறு எதுவும் இல்லை. சனாதன தர்மத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னதான் நடந்தாலும் நடக்கட்டும் என்றார்.
மேலும் ஒட்டு மொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக பயித்தியக்காரத்தனமாக சிலர் பேசுகின்றனர். சனாதனம் கோட்பாடு ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதற்கு திமுகவினரை எல்லாம் கொலை செய்வதாக அர்த்தமா? எல்லாருக்கும் எல்லா கிடைக்க வேண்டும் என்பதே திராவிட கொள்கை. முன்பு பெண்கள் படிக்க கூடாது. மேலாடை அணிய கூடாது. இதையெல்லாம் மாற்றியதே திராவிட மாடல், வேண்டுமென்று பாஜகவினர் போலி செய்தி பரப்புகின்றனர். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றியடைந்ததை திசைதிருப்பவே பாஜகவினர் இப்படி செய்கின்றனர். வதந்திகள் பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
இதனிடையே உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சாமியார் என அழைத்துக் கொள்ளும் பரமஹன்ஸ ஆச்சார்யா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் வெட்டி, கிழித்து தீ வைத்து எரித்துள்ளார். அத்துடன் அமைச்சர் உதயநிதியை கொலை செய்து தலையை வெட்டி எடுத்து வருவோருக்கு ரூ10 கோடி பரிசு தருவேன் எனவும் அயோத்தி சாமியார் அறிவித்துள்ளார்.
-
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications