Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலையிலேயே ஷாக்.. 4 பஸ்கள் - 2 கார்கள் மோதி தீப்பிடித்தது.. 4 பேர் பலி - 25 பேர் காயம்.. பனி மூட்டத்தால் சோகம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் டெல்லி - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று அதிகாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து 4 பஸ்கள், 2 கார்கள் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 4 பேர் உடல் கருகி பலியாகி உள்ள நிலையில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் டெல்லி - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலை செல்கிறது. இந்நிலையில் இன்று காலையில் அந்த சாலையில் கோர விபத்து நடந்தது. பனிமூட்டம் அதிகமாக இருந்த நிலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் பஸ்கள், கார்கள் அடுத்தடுத்து மோதின.

uttar pradesh bus accident

இதில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ அடுத்தடுத்து பிற வாகனங்களுக்கும் பரவியது. இதனால் அனைத்து வாகனங்களும் பற்றி எரிந்தன. விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் பலரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

இருப்பினும் விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் பலரும் பஸ்களில் இருந்து வெளியே ஓடிவந்துள்ளனர். ஆனாலும், பலர் பஸ், வாகனங்களில் சிக்கி உள்ளனர். இதையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து வாகனங்களில் பிடித்த தீயை அணைத்தனர்.

முதற்கட்டமாக 4 பேர் வரை பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

uttar pradesh bus accident

இந்த விபத்து பற்றி உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில், ‛‛3-4 பஸ்கள் மோதி தீப்பிடித்தன. விபத்து நடந்தபோது நான் தூங்கி கொண்டிருந்தேன். அதிகாலை 4 மணிக்கு விபத்து நடந்தது. அப்போது பஸ்சில் முழுவதுமாக மக்கள் இருந்தனர். அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தது'' என்று கூறியுள்ளார்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛4 பஸ்கள், 2 கார்கள் அடுத்தடுத்து விபத்து நடந்துள்ளது. கடும் பனிமூட்டத்தால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கி உள்ளன'' என்றனர்.தற்போது உத்தர பிரதேசத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

நேற்றைய தினம் பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்து காணப்பட்டது. அதோடு பனிமூட்டத்தால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உருவாகி இருந்தது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மொத்தமாக பனிமூட்டம் மூடியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+