அதிகாலையிலேயே ஷாக்.. 4 பஸ்கள் - 2 கார்கள் மோதி தீப்பிடித்தது.. 4 பேர் பலி - 25 பேர் காயம்.. பனி மூட்டத்தால் சோகம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் டெல்லி - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று அதிகாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து 4 பஸ்கள், 2 கார்கள் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 4 பேர் உடல் கருகி பலியாகி உள்ள நிலையில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் டெல்லி - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலை செல்கிறது. இந்நிலையில் இன்று காலையில் அந்த சாலையில் கோர விபத்து நடந்தது. பனிமூட்டம் அதிகமாக இருந்த நிலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் பஸ்கள், கார்கள் அடுத்தடுத்து மோதின.

இதில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ அடுத்தடுத்து பிற வாகனங்களுக்கும் பரவியது. இதனால் அனைத்து வாகனங்களும் பற்றி எரிந்தன. விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் பலரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
இருப்பினும் விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் பலரும் பஸ்களில் இருந்து வெளியே ஓடிவந்துள்ளனர். ஆனாலும், பலர் பஸ், வாகனங்களில் சிக்கி உள்ளனர். இதையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து வாகனங்களில் பிடித்த தீயை அணைத்தனர்.
முதற்கட்டமாக 4 பேர் வரை பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து பற்றி உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில், ‛‛3-4 பஸ்கள் மோதி தீப்பிடித்தன. விபத்து நடந்தபோது நான் தூங்கி கொண்டிருந்தேன். அதிகாலை 4 மணிக்கு விபத்து நடந்தது. அப்போது பஸ்சில் முழுவதுமாக மக்கள் இருந்தனர். அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தது'' என்று கூறியுள்ளார்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛4 பஸ்கள், 2 கார்கள் அடுத்தடுத்து விபத்து நடந்துள்ளது. கடும் பனிமூட்டத்தால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கி உள்ளன'' என்றனர்.தற்போது உத்தர பிரதேசத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
நேற்றைய தினம் பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்து காணப்பட்டது. அதோடு பனிமூட்டத்தால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உருவாகி இருந்தது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மொத்தமாக பனிமூட்டம் மூடியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications