அயோத்தியில் மசூதி.. 25 கிமீ தூரம் தள்ளி வழங்கப்பட்ட நிலத்தை ஏற்றது சன்னி வக்பு வாரியம்
லக்னோ: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மசூதி கட்டுவதற்கு உத்தரப்பிரதேச அரசு அளித்த ஐந்து ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அயோத்தி வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்துக்களுக்கே சொந்தம் என்றும் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அத்துடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்த உச்ச நீதிமன்றம், அதற்கு பதில் அயோத்தியிலேயே ஐந்து ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன்படி உத்தரப்பிரதேச அரசு அயோத்தியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரம் தள்ளி தன்னிப்பூர் என்ற கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.
இந்நிலயில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வாக்கை தொடுத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஹாஜி மஹ்பூப், மசூதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் அயோத்தியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அருகிலேயே நிலம் ஒதுக்க வேணடும். இல்லாவிட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.
இந்நிலையில் இன்று லக்னோவில் சன்னி முஸ்லீம் மத்திய வக்பு வாரியத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மசூதி கட்டுவதற்காக உத்தரப்பிரதேச அரசு கொடுத்த ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. . இந்த இடத்தில் டிரஸ்ட் மருத்துவமனை, பொது நூலகம் மற்றும் இந்தோ-இஸ்லாமிய கலாச்சார மையம் ஆகியவையும் கட்டுவதென தீர்மானிக்கப்பட்டது. முக்கியமான இந்த கூட்டத்தில் ஆறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், இம்ரான் மபூத் மற்றும் அப்துல் ரசாக் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications