Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கொலையை யார் செய்ததுனு அனைவருக்கும் தெரியும்.." அகிலேஷ் யாதவை கை நீட்டி எச்சரித்த யோகி.. என்னாச்சு?

"இந்தக் கொலையை ரவுடி அடிக் அமகமது செய்தது என்று அனைவருக்கும் தெரியும். யார் இந்த ரவுடி அடிக் அகமது. சமாஜ்வாதி வளர்த்தெடுத்த ரவுடிகளில் ஒருவர்தானே"

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேருக்கு நேராகக் கையை நீட்டி கடுமையாக எச்சரித்தார்.

உத்த பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ கொலை வழக்கில் சாட்சி ஒருவரை மர்மநபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தை எழுப்பி அகிலேஷ் யாதவ் விமர்சித்ததால், முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் ஆத்திரமடைந்தார்.

மேலும், உத்தரப்பிரதேசத்தில் ரவுடி சாம்ராஜ்யத்தையே உருவாக்கிவிட்டு இன்று எங்களைக் குற்றம்சாட்டுகிறீர்களா? என்றும் யோகி கேள்வியெழுப்பினார்.

பட்டப்பகலில் கொலை

பட்டப்பகலில் கொலை

உத்தரப்பிரதேசத்தில் உமேஷ் யாதவ் என்பவர் நேற்று பட்டப்பகலில் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மேலும், அவருக்கு பாதுகாப்புக்கு இருந்த 2 போலீஸாரும் சுடப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ கொலை வழக்கில் கடைசி சாட்சியாக இருந்தவர்தான் இந்த உமேஷ் யாதவ். எம்எல்ஏ கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பயங்கர ரவுடி அடிக் அகமதுவின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ரவுடி அடிக் அகமது சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தரபிரதேச சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று எழுப்பிப் பேசினார்.

"ராம ராஜ்ஜியம் தோல்வி"

அகிலேஷ் பேசுகையில், "பட்டப்பகலில் உத்தரப்பிரதேசத்தில் கொலை நடக்கிறது. அதுவும் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவரை ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலை செய்கிறார்கள். மேலும், பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரும் சுடப்பட்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் ராம ராஜ்ஜியத்தில் (பாஜகவை மறைமுகமாக குறிப்பிட்டு) சட்டம் ஒழுங்கு தோல்வியடைந்துவிட்டது" எனக் கூறினார்.

ஆத்திரமடைந்த யோகி ஆதித்யநாத்

ஆத்திரமடைந்த யோகி ஆதித்யநாத்

அகிலேஷின் இந்த பேச்சால் ஆத்திரமடைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டென எழுந்து நின்று அகிலேஷ் யாதவை நேருக்கு நேர் பார்த்து கையை நீட்டி எச்சரிக்கும் தொனியில் பேசினார். "இந்தக் கொலையைச் செய்தது யார் என்று அனைவருக்கும் தெரியும். ரவுடி அடிக் அகமதுதான் உமேஷ் யாதவை கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். யார் இந்த ரவுடி அடிக் அகமது? சமாஜ்வாதி வளர்த்தெடுத்த ரவுடிகளில் ஒருவர்தானே அவர். உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் ரவுடிகளுக்கு காட்ஃபாதராக இருப்பவர்தான் இந்த அடிக் அகமது.

"மரியாதையாகப் பேசுங்கள்"

உங்கள் (அகிலேஷ் யாதவ்) ஆட்சிக்காலத்தில் தான், உத்தரப்பிரதேசம் ரவுடிகள் சாம்ராஜ்யமாக மாறியது. இந்த மாஃபியா கும்பலை நாங்கள் (பாஜக அரசு) வேரறுத்து வருகிறோம். இன்று நீங்கள் எங்களையே குற்றம்சாட்டிப் பேசுகிறீர்களா? முதலில் மரியாதையாகப் பேசுங்கள். அது சரி.. உங்கள் தந்தைக்கே (முலாயம் சிங்) நீங்கள் மரியாதை தர மாட்டீர்கள். உங்களை நினைத்து நீங்களே வெட்கப்படுங்கள்" என யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது தான் பேசி முடிக்கும் வரை, அகிலேஷ் யாதவை நோக்கி நேருக்கு நேராக கை நீட்டிக்கொண்டே அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+