வேற லெவல்.. யோகியின் "தித்திப்பு" அறிவிப்பு.. என்னாது 1 டிரில்லியன் டாலரா.. பூரித்த உ.பி. விவசாயிகள்
உத்தரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயிகள் நிலை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையில் புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருப்பதாக பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில், உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதற்கேற்றவாறு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதாவது தொழில் வளர்ச்சி, மருத்துவம் மற்றும் கல்வியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

மட்டுமல்லாது வேளாண் தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பட்ஜெட் மீது உரையாற்றிய யோகி ஆதித்யநாத் கடந்த காலங்களை விட பாஜக ஆட்சி காலத்தில் மாநிலத்தில் கூடுதல் முதலீடுகள் குவிந்துள்ளது என்று கூறியுள்ளார். 2017ம் ஆண்டுக்கு முன்னர் வரை உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி நடைபெற்று வந்ததாகவும், பாஜக தற்போது மக்களுக்கான, விவசாயிகளுக்கான, தொழிலாளர்களுக்கான ஆட்சியை வழங்கி வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று வேளாண் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக மானிய விலையில் வழங்கப்பட்ட 77 டிராக்டர்களை விவசாயிகளுக்கு அவர் வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதன் மூலம் கரும்பு மட்டுமல்லாது எத்தனாலும் தயாரிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் வேளாண்மை என்பது ஒரு நஷ்டமடையும் தொழிலாக இருந்தது. வயல்களில் கரும்பு எரிக்கப்பட்டது. அதேபோல மாதத்தில் சில நாட்கள் மட்டுமே கரும்பு ஆலைகள் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது இது லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது. முன்பை விட விவசாயிகள் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கரும்பை அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு உரிய ஆதார விலை வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் தற்கொலை குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் எரிபொருள் அளவு குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு மாற்றாகதான் நாங்கள் எத்தனாலை உற்பத்தி செய்கிறோம். தேசிய அளவில் உத்தரப் பிரதேசத்தை போல வேறெந்த மாநிலமும் அதிக அளவு எத்தனாலை உற்பத்தி செய்வதில்லை.
இதற்கு காரணம் கரும்பு கொள்முதல்தான். முன்பை விட தற்போது இந்த கொள்முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல இதர விவசாயிகளுக்கும் இந்த அரசு பாதுகாப்பை வழங்கியுள்ளது. கோதுமைக்கான அடிப்படை ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அடுத்தது உருளைக்கிழங்கும் இருக்கிறது. மேலும், விவசாயிகளுக்கு விளைபொருட்களை அறுவடை செய்ய நவீன இயந்திரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேசம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications